கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ரூ.20 ஆயிரத்தில் திருமணம்

தமிழக சட்டசபையில் அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தபடி கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்கோவிலில் ஏழை, எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோவில் மூலம் ரூ.20 ஆயிரம் செலவில் திருமணம் நடத்தபடுகிறது.
இந்த திட்டப்படி திருமணம் செய்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோவில் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ரூ.2௦ ஆயிரத்துக்கான செலவு விவரம் வருமாறு:-
திருமாங்கல்யம் 2 கிராம் தங்கம் -1௦௦௦௦
மணமகன் ஆடை-1௦௦௦
மணமகள் ஆடை- 2௦௦௦
திருமந்திருக்கு மணமகன், மணமகள் வீட்டார் 20 பேர்களுக்கு திருமண விருந்து-2௦௦௦
பூ மாலை, புஷ்பம் -1௦௦௦
பாத்திரங்கள் வகையறா-1௦௦௦
இதர செலவு-1௦௦௦
மேலும் விவரங்கள் அறிய திருக்கோவில் அலுவலகத்தை அணுகி நேரில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
