சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை வளாகத்தில் உள்ள பாரதியார் மண்டபத்தில் 5 -ந் தேதி சனிக்கிழமை காலை 10மணிக்கு கம்ப சித்திரம் விழா நடைபெறுகிறது. கம்பரையும், ராமனையும் கொண்டாடும் இவ்விழாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்குகிறார். தமிழ்ப்பணியிலும் கம்பன் பணியிலும் தம்மைச் சிறப்பாக ஈடுபடுத்திக் கொண்ட 50 பேரை தேர்ந்தெடுத்து விழா மேடையில் கவர்னர் கவுரவிக்கிறார். கவர்னர் கவுரவிக்கும் 50 பேர்களில் கோவில்பட்டி கம்பன் கழக செயலாளர் சரவணச் செல்வன் ஒருவர். விழாவில் கலந்து கொள்வது […]
தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த மாதத்தில் (மார்ச்) இருந்து பெரும்பாலான நாட்கள் விலை ஏற்றத்திலேயே காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. மார்ச் 28-ந் தேதியில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. நேற்று தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று பவுனுக்கு அதிரடியாக ரூ.400 அதிகரித்து இருக்கிறது. அதன்படி, கோவில்பட்டியில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் […]
கோவில்பட்டியில் தூத்துக்குடி மாவட்ட மதிமுக சார்பில் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம் பி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கோவில்பட்டி ராஜீவ் நகர் நீடிய வாழ்வு ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி,மதிய உணவு வழங்கினர். தொடர்ந்து அங்குள்ள 90 முதியோர்களுக்கு ஆடைகள், பெட்ஷீட் ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ்,மத்திய ஒன்றிய செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். […]
தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த மாதத்தில் (மார்ச்) இருந்து பெரும்பாலான நாட்கள் விலை ஏற்றத்திலேயே காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. கடந்த மாதம் 25-ந் தேதி வரை விலை குறைந்து வந்த நிலையில், 26-ந் தேதியில் இருந்து உயரத் தொடங்கி 28-ந் தேதியில் முதல் தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டிய வண்ணம் இருக்கிறது. அந்த வரிசையில் நேற்றும் விலை அதிகரித்து, இதுவரையில் இல்லாத வரலாறு […]
கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் பங்குனி பெருந்திருவிழா நாட்கால் விழா நடந்திருக்கும் நிலையில் 4 -ந்தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் அங்குரார்ப்பணம் நடக்கிறது. அதை தொடர்ந்து 5.4.2025 சனிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் மேஷ லக்கனத்தில் கொடியேற்றம் நடக்கிறது,மாலை 4 மணிக்கு திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரப்பணி விடை ஸ்ரீ பலிநாதர் அஸ்திரதேவர் திருவீதி உலா நடைபெறும். அன்றைய மண்டகப்படிதாரர் : திருக்கோயில். […]
கோவில்பட்டி இலட்சுமி ஸ்ரீனிவாசா வித்யாலயா பள்ளி மாணவி பர விந்தியா மார்ச் 27 முதல் 30 வரை பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி வெண்கலப்பதக்கம் வென்றார். -2024 2025 ஆம் கல்வியாண்டில் SGFI தேசிய அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி வெள்ளிப்பதக்கம் வென்றார். பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் தங்க பதக்கம் வேன்றுள்ளார். முதலமைச்சர் கோப்பைக்கான […]
சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து காணப்படுவதால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.67 ஆயிரத்தை கடந்தது. இந்த நிலையில், கோவில்பட்டியில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி, பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு பவுன் ரூ.68,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,510-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் […]
தூத்துக்குடி மாவட்ட தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் கிராமப் பகுதிகளில் உள்ள வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து சுகாதார காவலரிடம் வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆவல்நத்தம் கிராம ஊராட்சியில் வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என முறையாக தரம் பிரித்து தூய்மை காவலரிடம் வழங்கிய மகேஸ்வரி, அனிதா,சங்கரலட்சுமி, ராதாருக்மணி, சமுத்திர வள்ளி, செல்வ ஈஸ்வரி ஆகியோருக்கு தூத்துக்குடி […]
கோவில்பட்டி கோ வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியும் தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன் கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து கல்லூரி சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது. கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற இந்த முகாமை கல்லூரி செயலர் மகேந்திரன் தொடங்கிவைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் சுப்புலட்சுமி, சுயநிதி பாடப்பிரிவுகளின் இயக்குனர் வெங்கடாசலபதி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கண் மருத்துவர்கள் கீர்த்தனா மற்றும் ரிங்சன் […]
கோவில்பட்டி அடுத்த கயத்தாறு அருகே காப்புலிங்கம் பட்டியைச் சேர்ந்தவர் சங்கிலி பாண்டி(வயது 29). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடம்பூரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் சங்கிலி பாண்டி மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் வழக்கம் போல் இன்று காலை 9 மணிக்கு கயத்தாரில் இருந்து புறப்பட்டு கடம்பூரில் உள்ள பெட்ரோல் பங்க் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். கயத்தாறு – கடம்பூர் நெடுஞ்சாலை சத்திரப்பட்டி விலக்கு அருகே சென்றபோது அவர் சென்ற […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
