சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த சித்தன் மகன் ராஜ்குமார் (வயது 35). மொபைல் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி தமிழரசி (26), மகன் அஸ்வரதன் (5) மற்றும் குடும்பத்தினர், உறவினர்களுடன் ஒரு காரில் நேற்று இரவு திருச்செந்தூர் கோவிலுக்கு புறப்பட்டு வந்தார். காரை ராஜ்குமார் ஓட்டினார். ]இன்று அதிகாலை மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே உள்ள துரைச்சாமிபுரம் விலக்கு பகுதியில் கார் வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் […]
. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணி கோவில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடந்தது. காலை 6 மணிக்கு பூவனநாத சுவாமி சன்னதி முன்பு கும்ப பூஜை, சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து கொடி பட்டம் எடுத்து ரத விதிகளை சுற்றி கோவிலை வந்து அடைந்தது. காலை 7 மணிக்கு மேல் சுவாமி சன்னதியில் […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவிலில் பங்குனி பெருந்திருவிழா நாளை 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றத்தை தொடர்ந்து தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், அம்பாள்-சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 13-ந்தேதி தேர் திருவிழா, 14-ந் தேதி தீர்த்தவாரி, 15-ந்தேதி தெப்ப திருவிழா நடைபெறுகிறது. கோவில்பட்டி பங்குனி திருவிழா என்பது உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மக்களுக்கும் விஷேசமானது. கோவில் திருவிழாவை காண கூட்டம் கூட்டமாக வருவார்கள். அவர்கள் மனம் குளிர […]
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படியும் பொதுச் செயலாளர் ஆனந்த் ஆலோசனையின் படியும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வடக்கு மாவட்ட நிர்வாகி பாலசுப்பிரமணியன் தலைமையில், ஒன்றிய அரசால் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராகவும் வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன, ஆர்ப்பாட்டத்தில் […]
தங்கம் விலை கடந்த மாதத்தில் (மார்ச்) இருந்து பெரும்பாலான நாட்கள் விலை ஏற்றத்திலேயே இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறுமுகத்திலேயே உள்ளது. கடந்த மாதம் 25-ந் தேதி வரை விலை குறைந்து வந்த நிலையில், 26-ந் தேதியில் இருந்து வேகமாக விலை உயரத் தொடங்கியது. கடந்த 28-ந் தேதியில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. நேற்று ஒரு பவுனுக்கு அதிரடியாக ரூ.400 அதிகரித்து ரூ.68,480-க்கும், ஒரு கிராம் ரூ.50 […]
கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தின் முன்பு பி.எஸ்.என்,எல். மற்றும் தபால் துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் சங்கங்கள் சார்பில் 25.3.2025 ல் பார்லி மென்டில் ஓய்வூதியர்கள் 8வது சம்பள கமிஷனில் கடந்த காலங்கள் போல் பயன் பெற இயலாது என்று மாற்றி அமைக்க பெற்ற பைனான்ஸ் பில்லை வாபஸ்பெறக்கோரி இந்தியா முழுவதும் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பி.எஸ்.என்,எல். ஓய்வூதிய சங்க தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் போஸ்டல் சங்க தலைவர் வீரண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். AIPEU P3 கோட்ட […]
அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்ககோரி, கோவில்பட்டியில் இந்திய
கோவில்பட்டி போஸ் நகர், சாஸ்திரி நகர் வடக்கு தெருவில் அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் நகர உதவிச் செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் சரோஜா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ப பரமராஜ்,வக்கீல் ரஞ்சனி கண்ணம்மா மற்றும் போஸ் நகர், சாஸ்திரி நகர் […]
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகா பாரதியார் நினைவு நூற்றாண்டு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 292 மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இக்கல்லூரியில் பயின்று வரும் 17 வயது மாணவி உட்பட 3 பேரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பேராசிரியர் மதன் குமார் மீதும், இப்பிரச்சினைகளை மூடி மறைக்க முயன்ற கல்லூரி முதல்வர் பேபி லதா மீதும், வழக்கு பதிவு செய்து கைது செய்யவேண்டும் என்று கோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு […]
கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் மற்றும் சிவா மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் வழக்கறிஞர் சங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க தலைவர் சங்கர் கணேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயசீலன், பொருளாளர் ரேவதி,துணைத் தலைவர் சிவனுபாண்டி, துணைச் செயலாளர் முனீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ முகாமை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்தி தொடங்கி வைத்தார். முகாமில் சார்பு நீதிபதி மாரிக்காளை,முனிசீப் நீதிபதி கருப்பசாமி,விரைவு நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன்,குற்றவியல் நீதிமன்ற […]
தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்துமுருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் கருத்துக்களை பல்வேறு நிகழ்வுகள் மூலம் பரப்புரை செய்து வருகிறது. இதில் 17 முதல் 22 வயதுவரை உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டினை ஜூன் மாதம் கோவையில் நடத்த […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
