கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்


கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் மற்றும் சிவா மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் வழக்கறிஞர் சங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க தலைவர் சங்கர் கணேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயசீலன், பொருளாளர் ரேவதி,துணைத் தலைவர் சிவனுபாண்டி, துணைச் செயலாளர் முனீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவ முகாமை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்தி தொடங்கி வைத்தார். முகாமில் சார்பு நீதிபதி மாரிக்காளை,முனிசீப் நீதிபதி கருப்பசாமி,விரைவு நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன்,குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் கடற்கரைசெல்வன்,பீட்டர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
மருத்துவர்கள் சிவநாராயணன்,சஞ்சய்,ஆத்மிகா ஆகியோர் கலந்து கொண்டு எலும்பு சிகிச்சை மற்றும் மகளிர்களுக்கான சிகிச்சை அளித்தனர்.
அரசு வழக்கறிஞர் சம்பத்குமார், வழக்கறிஞர்கள் ஆழ்வார்சாமி, சிவக்குமார், போஸ் என்ற ஐயப்பன்,ரெங்கராஜன் மணிகண்டன், நாகராஜன்,சந்திரசேகர், ராதாகிருஷ்ணன்,மாரிக்கண்ணன், வளவன்,பாரதி மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
