ரெயிலில் பயணம் செய்யும்போது இனி கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என்றும் புதிய கட்டுப்பாடுகளை இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது.இந்தப் புதிய விதிகளின்படி, பயணிகள் ரெயில் வகுப்புகளைப் பொறுத்து 35 முதல் 70 கிலோ வரை லக்கேஜை இலவசமாக கொண்டுசெல்லலாம். அதன்படி, ஏ.சி. முதல் வகுப்பில் பயணிப்பவர்கள் 70 கிலோ வரை லக்கேஜையும் ஏ.சி. இரண்டாம் வகுப்பில் பயணிப்பவர்கள் 50 கிலோ வரை லக்கேஜையும் இலவசமாக எடுத்துச்செல்லலாம்.ஏ.சி. […]
‘தினத்தந்தி’ ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிவரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும். அதன்படி, ‘கலைஞர் எழுதுகோல் விருது’ க்கான தேர்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில் 2021-ம் ஆண்டிற்கான விருதாளராக மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் (வயது 87) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.திருச்சிராப்பள்ளி […]
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளான ஜூன்.3-ந்தேதி (இன்று) அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும், கருணாநிதி உருவச்சிலை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.அதனைச் செயல்படுத்திடும் வகையில், கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், 3 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை […]
பிரபல பின்னணி பாடகர் கே.கே. என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். 53 வயதான பாடகர் கே.கே., கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பிறகு திடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.அதனை தொடர்ந்து, அவரது உடல், உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த பிரேதப் பரிசோதனை வீடியோ எடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவின்படி, கிட்டத்தட்ட மூன்று மணி நேர மேடை நிகழ்ச்சிக்குப் […]
அ.தி.மு.க.,வின் அம்மா பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான 2 நாள் செயல்திறன் பயிற்சி சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமையகத்தில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில்,முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க அமைப்புச் செயலாளருமான பொன்னையன் பேசியதாவது:-அ.தி.மு.க.,வின் கூட்டணி கட்சியாக பா.ஜ.க. இருந்தாலும், அதன் வளர்ச்சி அ.தி.மு.க., தமிழகம் மற்றும் திராவிடக் கொள்கைகளுக்கு நல்லதல்ல.தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிராக பா.ஜ.க. செயல்படுகிறது. காவிரி நதிநீர் மற்றும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளில் பா.ஜ.க இரட்டை வேடம் போடுகிறது. கர்நாடக பா.ஜ.க., தமிழ்நாட்டுக்கு தண்ணீர் […]
.அதி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 23.6.2022 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் தற்காலிக கழக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.அ.தி.முக.. கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் […]
விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலர் பயன்படுத்தும் அரசு காரின் டிரைவராக இருந்தவர் பணி ஓய்வு பெற்றார். இதையொட்டி நேற்று அலுவலகத்தில் அவருக்கு பிரிவுபசார விழா நடைபெற்றது.பின்னர் அவர் வீட்டுக்கு கிளம்பினார். தினமும் தன்னை வீட்டில் இருந்து அழைத்து வந்த டிரைவர் இன்று பணி ஓய்வு பெற்று செல்லும்போது அவரை கவுரவிக்கும் வகையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா நடவடிக்கை மேற்கொண்டார்வழக்கமாக தான் அமர்ந்து வரும் முன் இருக்கையில் அந்த டிரைவரை அமரவைத்து டிரைவர் இருக்கையில் கல்வி […]
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவு பொருள் உற்பத்தி மற்றும் விநியோகத்தை சீரமைக்க புதிதாக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.அதே சமயம் இலங்கை மக்களுக்கு தேவையான உணவு, எரிபொருள், மருந்து மற்றும் உரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கி இந்தியா உதவி வருகிறது. இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று இலங்கை விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா, இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லேவை சந்தித்து பேசினார்.அப்போது இலங்கைக்கு கடன் உதவித் […]
திருச்சி மாவட்டம், மணப்பாறை அத்திகுளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, திண்டுக்கல் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளியில் இறுதித் தேர்வு எழுதி முடித்துவிட்டு மாலை வீடு திரும்பினார். திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே மாணவி வந்தபோது, அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர், வாக்குவாதம் செய்திருக்கிறார். வாக்குவாதம் முற்றியபோது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்திவிட்டு […]
தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் கே. சந்திரசேகரன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் , நரேந்திர மோடியின் செயல்பாடுகளைப் பற்றி விமர்சிக்கும்போது, நடிகர்திலகம் சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால், தன்னுடைய நடிப்புத் திறமைக்காகப் பெற்ற செவாலியே உள்ளிட்ட விருதுகளை, பிரதமர் மோடிக்கு கொடுக்கச் சொல்லியிருப்பார் என்று கிண்டலாக கூறியிருக்கிறார். இப்படி ஒப்பிட்டுப் பேசியிருப்பதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். திரையுலகில் மட்டுமல்ல, பொதுவாழ்விலும் யாருடனும் ஒப்பிட முடியாதவர் […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
