அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தின் முடிவுகள் ரகசியம்-துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம்; டி.ஜெயக்குமார் பேட்டி
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் இன்று தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்தபிறகு கட்சியின் அமைப்புசெயலாளரான முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-65 தலைமைக்கழக நிர்வாகிகள்ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரது பதவி அதாவது பொறுப்பு காலாவதி ஆகிவிட்ட சூழ்நிலையில் கழகத்தை வழிநடத்துவதற்கு, கழக சட்டதிட்ட விதிகளில் இடமிருக்கின்ற சூழ்நிலையில் கழகத்தை வழிநடத்தவேண்டும் என்ற வகையில், எடப்பாடி பழனிசாமியை அதாவது கழக தலைமை நிலைய செயலாளரை, தலைமைக்கழக நிர்வாகிகள் அனைவரும், […]