• June 6, 2025

ஓ.பன்னீர்செல்வத்தால் அ.தி.மு.க. தொண்டர்கள் மன உளைச்சல்-டி.ஜெயக்குமார்

 ஓ.பன்னீர்செல்வத்தால்  அ.தி.மு.க. தொண்டர்கள்  மன உளைச்சல்-டி.ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் 5 குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதற்கு எங்கள் தரப்பை சேர்ந்த சி.வி.சண்முகம் விளக்கமாக பதில் அளித்துள்ளார். அதை வைத்திலிங்கம் பார்த்து தெளிவு பெறுவது நல்லது.
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டபோது எடப்பாடி பழனிசாமி உடனடியாக கண்டித்தார். தொண்டர்களையும் அமைதிப்படுத்தினார்.
யாரையும் அவமதிக்கும் நோக்கம் தொண்டர்களுக்கு கிடையாது. வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மன உளைச்சலில் இருப்பதாக கூறுகிறார்கள்.
அவருக்கு ஏன் வீண் மன உளைச்சல். ஊரோடு ஒத்துவாழ் என்பார்கள். அனைவரும் ஒற்றை தலைமைக்கு ஆதரவு கொடுப்பது போல அவரும் ஒற்றைத் தலைமைக்கு ஆதரவு கொடுத்து கட்சியினரோடு ஒத்து போயிருக்கலாம்.
ஆனால் அவர் கோர்ட்டை நாடுகிறார். தேர்தல் ஆணையத்தை நாடுகிறார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு மன உளைச்சல் இல்லை. அவர் செய்யும் கலகங்களால் அ.தி.மு.க. தொண்டர்கள் தான் மன உளைச்சலில் உள்ளனர்.
அ.தி.மு.க.வில் எடப்பாடி தலைமையிலான ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பா.ஜனதா தலையீடு இல்லை. 3-வது நபரின் தலையீட்டை அ.தி.மு.க.வும் ஏற்காது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *