கரூர் மாவட்டம், தென்னிலை சுற்றுவட்டார பகுதியில் கரூர் சின்ன ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 39) என்பவருக்கு சொந்தமான தனியார் கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரிக்கு அருகில் கரூர் குப்பம் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன் (52) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.கடந்த 2019-ம் ஆண்டு செல்வக்குமார் நிலப்பிரச்சினை தொடர்பாக தன்னை கொலை செய்ய முயன்றதாக ஜெகநாதன் க.பரமத்தி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். […]
சென்னை அண்ணா சாலையை ஒட்டியுள்ள ராயப்பேட்டை ஜெனரல் பேட்டர்ஸ் சாலையில் பார் வசதிகளுடன் கூடிய தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சனிக்கிழமை நள்ளிரவில் மது விருந்துகளுடன் பெண்கள் ஆபாச நடனம் மற்றும் குத்தாட்டம் போடுவதாக அண்ணாசாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் அந்த விடுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கு 30-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் தங்களின் ஆண் நண்பர்களுடன் நடனமாடிக்கொண்டு இருந்தனர். குடிபோதை தலைக்கேறி மதுமயக்கத்தில் இருந்த அந்த இளம்பெண்கள் அங்கு […]
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் கடந்த 7-ந்தேதி தொடங்கினார்.கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,570 கி.மீ. தூரம் 150 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்கிறார். 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக தனது பாதயாத்திரையை அவர் காஷ்மீரில் நிறைவு செய்ய உள்ளார்.இதற்கான தொடக்க விழா கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை வழங்கி ராகுல்காந்தியின் பாதயாத்திரையை தொடங்கி […]
சென்னை சென்னை தண்டையார்பேட்டை கைலாசம் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 25). இவர், சென்னையில் ஒரு நகை கடையில் வேலை செய்து வருகிறார். அதே கடையில் வேலை செய்த 20 வயது இளம்பெண்ணை சதீஷ்குமார் காதலித்து வந்தார். இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர் வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்தனர்.காதலிக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு நடைபெறுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார், தனது காதலியிடம், “என்னை காதலித்து ஏமாற்றி விட்டு இப்போது […]
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் தி.மு.க.வுடன் தொடர்பில் இல்லை; டி.ஜெயக்குமார் திட்டவட்டம்
அ.தி.மு.க. தலைமைக்கழகதத்துக்கு பாதுகாப்பு கேட்டு டி.ஜி.பி.யை சந்தித்து கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- ஒருங்கிணைப்பாளர் பதவியை மீண்டும் கொண்டுவர ஓ.பி.எஸ். முயற்சி மேற்கொள்கிறாரா? பதில்:- உயர்நீதிமன்றத்தில இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தெளிவான ஒரு தீர்ப்பினை வழங்கியது. அந்த தீர்ப்பின்படி பார்த்தால் அவர் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. எனவே அப்படி முயற்சி […]
தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து மின் கட்டண உயர்வு குறித்த கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மின்சார வாரிய இணையதளங்களில் மின்சார கட்டண விவரங்கள் வெளியிடப்படும் என்றும் மின் கட்டண உயர்வு தொடர்பான கருத்துகளை தெரிவிக்க 30 நாட்கள் காலஅவகாசம் வழங்கியும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருந்தது.அதன்படி பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த புதிய மின்கட்டண […]
தி.மு.க.எம்.எல்.ஏ.க்களிடம் உண்மை கண்டறியும் சோதனை; முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்
தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தியின் மகன் தியானேஷ்-ஸ்மிர்தவர்ஷினி ஆகியோரின் திருமணம் மதுரை கலைஞர் அரங்கத்தில் நடந்தது. இதில், முன்னிலை வகித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமண நிகழ்வை நடத்தி வைத்து உள்ளார்.இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என்னோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அவரிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்களே அவரிடம் பேசுவதில்லை. எங்கள் (தி.மு.க.) எம்.எல்.ஏ. வந்து பேசுகிறார்கள் என்று அவர் ‘புரூடா’ விட்டுக்கொண்டிருக்கிறார்.ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி, சட்டமன்ற தேர்தலில் […]
மருத்துவ படிப்புக்கான நீட நுழைவு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தமிழ்நாட்டில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்து மதுரை மாணவர்த்ரிதேவ் விநாயகா சாதனை படைத்துள்ளார்தேர்வு மதிப்பெண் பட்டியலைதேசிய தேர்வு ஆணையம் நேற்றிரவு வெளியிட்டது. அதில் மதுரையை சேர்ந்த மாணவர் த்ரிதேவ் விநாயகா, அகில இந்திய அளவில் தரவரிசையில் 30-வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார். இவர் மருத்துவ நுழைவுத் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அ.தி.மு.க. தலைமை அலுவலகம் சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, 8.9.2022 – வியாழக்கிழமை காலை 10 மணியளவில், தலைமைக் கழகம் – புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகைக்கு வருகை தருகிறார்.தலைமைக் கழக வளாகத்தில் உள்ள கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது திருஉருவச் […]
கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியை சேர்ந்தவர் மகேஷ்( வயது 30) இவருக்கும் ஷில்பா(வயது 27) என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. பின்னர் மகேஷ் -ஷில்பா தம்பதி கோனேகுண்டே என்ற பகுதியில் வசித்து வந்தனர்.திருமணத்துக்கு முன்பு ஷில்பா ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. திருமணத்துக்கு பிறகு கணவருக்கு தெரியாமல் காதலனுடன் உல்லாசமாக ஊர் சுற்றியதாக தெரிகிறது.\இந்த விவகாரம் கணவர் மகேசுக்கு தெரிந்தது. இதுகுறித்து மனைவி ஷில்பாவிடம் கேட்டபோது அவர் எனது நண்பர் […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
