• June 7, 2025

தமிழகத்தில் அமலுக்கு வந்த மின்கட்டண உயர்வு எவ்வளவு? முழு விவரம்

 தமிழகத்தில் அமலுக்கு வந்த மின்கட்டண உயர்வு எவ்வளவு? முழு  விவரம்

தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து மின் கட்டண உயர்வு குறித்த கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, மின்சார வாரிய இணையதளங்களில் மின்சார கட்டண விவரங்கள் வெளியிடப்படும் என்றும் மின் கட்டண உயர்வு தொடர்பான கருத்துகளை தெரிவிக்க 30 நாட்கள் காலஅவகாசம் வழங்கியும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மின் கட்டணம் உயர்தப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
*2 மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை ரூ 55 உயர்த்தப்படும்

*300 யூனிட்டுகள் வரை – ரூ.145

*400 யூனிட்டுகள் வரை – ரூ295

*500 யூனிட்டுகள் வரை – ரூ.310

*600 யூனிட்டுகள் வரை ரூ.550

* 700 யூனிட்டுகள் வரை ரூ.595

*800 யூனிட்டுகள் வரை ரூ.790

*900 யூனிட்டுகள் வரை ரூ.1130 உயர்த்தப்படும்.
*100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் குறைக்கப்பட்ட மின்சாரத்துக்குரிய மின் மானியத்தை நுகர்வோர் விரும்பும் பட்சத்தில் “மின் மானியத்தை தாமாக விட்டுக் கொடுக்கும்” திட்டம் மூலம் அமல்படுத்தபடும்.

*தற்போது குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டு தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *