சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 34) மற்றும் இவரது நண்பர்கள் ஏழுமலை (29), கவியரசு( 3), சுரேஷ் (40), காமராஜ் ( 39), கார்த்தி (29), மற்றும் செல்வகுமார் ( 32) ஆகிய 7 பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர்.பின்னர் அங்கிருந்து நேற்று மாலை சென்னைபுறப்பட்டனர், அவர்கள் சென்ற கார் நள்ளிரவில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானதுஇந்த விபத்தில் பாலகிருஷ்ணன் […]
கேரள மாநிலத்தில் ‘ஷவர்மா’ சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள ஷவர்மா விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். கோவில்பட்டியில் 2 கடைகளில் கெட்டுபோன 1௦ கிலோ சிக்கன் கைப்பற்றி அளிக்கப்பட்டது. இந்நிலையில் ‘ஷவர்மா’ விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- மேலைநாட்டு உணவு வகையான ‘ஷவர்மா’ அந்த நாட்டின் மக்களின் […]
கேரள மாநிலம் கொல்லத்தில் புதுவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக காய்ச்சல், உடல் வலி, கை, கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் உள்பட பல அறிகுறிகளுடன் 5 வயதுக்கு உட்பட்ட ஏராளமான குழந்தைகள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதை தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தக்காளி காய்ச்சல் எனப்படும் புதிய வகை வைரஸ் பரவி வருவது தெரியவந்தது. இதை தொடர்ந்து இந்த வைரஸ் வேகமாக பரவி வரும் ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் ஆகிய பகுதிகளில் […]
நீலகிரியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கோடை விழாவின் முதல் நிகழ்வான காய்கறி கண்காட்சி மே 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் இன்று தொடங்கியது. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், மலைத்தோட்ட காய்கறி விவசாயிகளின் வாழ்வாதரம் மேம்படவும் நடத்தப்படும் இந்த கண்காட்சியில் கோவை, திருவண்ணாமலை, தர்மபுரி, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து வருகை தந்திருந்தனர். தோட்டக்கலை துறையினர் சார்பில் கத்தரிக்காய், பூசணிக்காய், கேரட், […]
பெங்களூருவை சேர்ந்த ‘வேக் பிட்’ என்ற தலையணை, மெத்தை தயாரிப்பு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 30 நிமிடம் தூங்கும் இடைவேளையை அறிவித்துள்ளது. இதன்படி ஊழியர்கள் அனைவரும் மதியம் 2 மணி முதல் 2.30 மணி வரை அலுவலகத்தில் தூங்கிகொள்ளலாம். இதற்காக வசதியான படுக்கைகளும், சத்தமில்லாத அறையும் உருவாக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து அந்நிறுவனத்தின் சி.இ.ஓ சைதன்யா ராமலிங்ககவுடா கூறுகையில், “மதிய நேரத்தில் தூங்குவது நமது ஞாபக சக்தி, படைப்பாற்றல் மற்றும் கவனத்திறனை அதிகரிக்கும். நாசாவின் ஆய்வு ஒன்றில் 26 நிமிட […]
அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜுன்மோனி ரபா, இவர் உதவி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அவரது பெற்றோர் ஜுன்மோனி ரபாவிற்கு திருமணத்திற்காக வரன் தேடினர். திருமணம் வரம் பார்க்கும் இணையதளத்தில் பதிவு செய்து இருந்தனர்.இதை பார்த்து ராணா போகட் என்பவர் இணையதளம் வழியாக ஜுன்மோனிக்கு அறிமுகமானார். தான் அரசு அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பதாக கூறினார். இதை நம்பிய ஜுன்மோனி, ராணா போகட்டுடன் பேசி பழகிவந்தார்.இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் […]
பாம்பன் பாலத்தில் விபத்து: கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் கடலுக்குள் விழுந்தார்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி ஒருவர் மோட்டார் சைக்கிளிலில் சென்றார். பாம்பன் பாலத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது கார் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கார் மற்றும்மோட்டார் சைக்கிள் பாலத்தின் நடைபாதை மீது ஏறி மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் தூக்கி வீசப்பட்டு கடலில் விழுந்தார். இந்த விபத்தை பார்த்த அந்த பகுதியினர் ஓடிவந்து […]
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செயப்பட்டுள்ளது.அந்த வகையில், தி.மு.க. அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது தாயார் தயாளு அம்மாள் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். அண்டைபக்கத்துஇதனை தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியில் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக காரில் சென்றார்.ராதாகிருஷ்ணன் (ஆர்கே) […]
முதல் -அமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவை ஒட்டி, இன்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க புதிய திட்டம். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும். முதற்கட்டமாக 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் ; அனைத்து மாணவர்களுக்கும் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும். முதற்கட்டமாக மாநகராட்சி, தொலைதூர கிராமங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, படிப்படியாக விரிவு செய்யப்படும். […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஏழாயிரம்பண்ணை சாலையில் தனியார் கல்லூரி பஸ், நேற்று காலை மாணவிகளை எத்ரிக்க்லோண்டு கல்லூரிக்கு சென்றபோது மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது.இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 26 மாணவிகள் காயமடைந்தனர். அவரகள் மீட்கப்பட்டு மதுரை, விருதுநகர்,சாத்தூர் அரசு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்நிரன், காயமடைந்த மாணவிகளை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து உடல்நலம் குறித்து மருத்துவர்கள் மற்றும் மாணவிகளிடம் கேட்டறிந்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த […]
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022