சென்னை-திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரெயில்; தென்னக ரெயில்வே பொதுமேலாளர் தகவல்

தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர். என் சிங் திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆர். என். சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
தென்னக ரெயில்வே சார்பில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலையத்திற்கு இணையான உலகத்தரம் வாய்ந்த அளவிற்கு திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையத்தை கட்டமைக்கும் பணிகள் தொடங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் வரை இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்த உடன் கூடுதல் ரெயில்கள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும். திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையத்தில் மறு கட்டமைப்பின் போது கூடுதலான நடைமேடை ஏற்படுத்தப்படும். திருநெல்வேலி சென்னை இடையிலான வந்தே பாரத் துறையில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படலாம். திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் மேம்படுத்தப்படும்.
அதிகமான வருவாய் தரும் திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த ரெயில் நிலையம் போன்று அமைக்கப்படும். அதற்கான பணிகளை ஆய்வு செய்து ரெயில்வே துறைக்கு அறிக்கை அனுப்ப இருக்கிறோம்.
இவ்வாறு தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்தார்.
