மழலையர் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள்

கோவில்பட்டி புது ரோட்டில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அங்கன்வாடி,எல்கேஜி,யுகேஜி,வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மழலையர் பள்ளி மாணவர்களுக்கு கோவில்பட்டி ஜே.சி.ஐ. சார்பில் குழந்தைகளுக்கான ஆங்கில பாடல்கள்,தமிழ் பாடல்கள்,விலங்குகள்,பறவைகள்,தமிழ் எழுத்துக்கள்,பூச்சி இனங்கள்,பழங்கள்,காய்கறிகள் உள்ளிட்ட பலவகையான விளக்கப் படங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜூன்னிசாபேகம் தலைமை தாங்கினார். கோவில்பட்டி ஜே.சி.ஐ. தலைவர் தீபன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மழலையர் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்களை வழங்கி பேசினார்.

ஜே.சி.ஐ. செயலாளர் சூர்யா,பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பாராயன் அனைவரையும் வரவேற்றார். ஜே.சி.ஐ.இணைச் செயலாளர் அருண் பிரசாத், குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் ராணி விஜயா,முத்துமாரி அங்கன்வாடி ஆசிரியர் நர்மதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மழலையர் பள்ளி ஆசிரியர் மகேஸ்வரி நன்றி கூறினார்.
