தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஜயகாந்தின் பிறந்தநாளை தே.மு.தி.க.வினர் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகின்றனர். விஜயகாந்த், தனது பிறந்த நாளையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி இன்று காலையில் இருந்து தே.மு.தி.க.தொண்டர்கள் வந்தவண்ணம் இருந்தனர். […]
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என குறைக்க வேண்டும், மது வாங்குவோருக்கு உரிய அடையாள அட்டை வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறி இருந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, “மது வாங்குபவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அரசு அமல்படுத்த வேண்டும். இந்த அட்டை வைத்து உள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானங்களை டாஸ்மாக் […]
சாலை விபத்தில் பலி: தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி; முதல்-அமைச்சர்
தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:- நான்குநேரி சுங்கசாவடி அருகே நேற்று இரவு நடத்த சாலை விபத்தில் திருநெல்வேலி மாவட்டம் ஆரைகுளம் முன்னீர் பள்ளத்தை சேர்ந்த தனியார் தொலைகாட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் (வயது 33) என்பவர், சந்திரயான் விண்கலம் தொடர்பான செய்திக்காக திருவனந்தபுரம் சென்று திருநெல்வேலி திரும்பும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 […]
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து தாம்பரத்துக்கு வாரத்திற்கு 3 முறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து இந்த ரெயில் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டு வந்தது. குளிர்சாதன வசதி கொண்ட பி.5 பெட்டியில் ஏ.சி. இயங்கவில்லை. இதனால் பயணிகள் சிரமம் அடைந்தனர். அந்த பெட்டியில் 70-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த நிலையில் ஏ.சி. இயங்காதது குறித்து ரெயில்வே நிா்வாகத்திற்கு ஆன்லைனில் புகார் தெரிவித்தனர். ஆனால் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்துள்ளது. […]
அ.தி.மு.க. மாநாட்டுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கவில்லை; டி.ஜி.பி.யிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
கடந்த 20 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. வீர வரலாற்று எழுச்சி மாநாட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரி உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்த பின்னும் காவல்துறை அதிகாரிகள் போதிய பாதுகாப்பு அளிக்காதது குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் (டி.ஜி.பி.). சங்கர் ஜிவாலை நேரில் சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தார். அப்போது அ.தி.மு.க .வக்கீல் அணியினர் […]
அரசியல் விமர்சகர் சவுக்குசங்கர் அ.தி.மு.க. தேர்தல் குழு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று நேற்று சமூக வலைதளங்களில் செய்தி பரவியது,. தொடர்ந்து அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் ஒரு அறிக்கையும் வெளியானது. அந்த அறிக்கையில் அ.தி.மு.க. தேர்தல் குழு ஆலோசகராக கழக உறுப்பினராக பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் அவர்களை தலைமை கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின் ஏக மனதுடன் நியமனம் செய்கிறேன் என்று கூறி இருந்தார்.இது தவறான செய்தியாகும். வேண்டுமென்றே எடப்பாடி பழனிசாமி பெயரில் […]
அ.தி.மு.க. பொன் விழா எழுச்சி மாநாடு, மதுரை வலையங்குளம் ரிங்ரோட்டில் நேற்று நடந்தது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காலையில் மாநாடு அரங்கில் கட்சி கொடியேற்றி எடப்பாடி பழனிசாமி, மாநாட்டை தொடக்கி வைத்தார். இதை தொடர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கி நடந்தன. மாலையில் தொடங்கிய மாநாட்டு உரை நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர்கள் ராஜலட்சுமி, செல்லூர் ராஜூ, தனபால், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், […]
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தில் ஒரு கிணற்றில் கடந்த 10 ம் தேதி சாக்கு முட்டையில் அழுகிய நிலையில் ஒரு இளம் பெண் உடல் மிதந்தது இது பற்றி கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிணற்றில் பிணமாக மிதந்தவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள இருவாணிவயல் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகள் வினோதினி !வயது 19) என்பது தெரிய வந்தது. திருமணமாகி 4 மாதங்களே […]
நீட் தேர்வை எதிர்த்தும் ஆளுநரை கண்டித்தும் தி. மு. க.இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பாக தூத்துக்குடியில் இன்று ஒருநாள் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்கள் பி கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் உண்ணாவிரத முடிவில் மாலை 5 மாநில துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம். பி., பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். நிகழ்வில் மேயர் ஜெகன் பெரியசாமி, வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் […]
நரம்பியல் நோயினால் இரண்டு கால்களும் செயல் இழந்த டாக்டர் ஒருவர், மற்றவர்கள் யாரும் தன்னை போல் பாதிக்ககூடாது என்பதற்காக 10 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து வருகிறார். அவரது பெயர் ஆறுமுகம். கன்னியாகுமரி அருகே தலைக்குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர். 1953-ம் ஆண்டு பிறந்த இவர் பள்ளிப்படிப்பை அரசு பள்ளியில் முடித்தார். பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்தபிறகு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்துக்கொண்டே மேல் படிப்பு படித்து மூளை நரம்பியல் நிபுணர் ஆனார். இவர் குடும்பத்தில் […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
