சவுக்கு சங்கருக்கு அ.தி.மு.க.வில் பதவி என்று போலி அறிக்கை
அரசியல் விமர்சகர் சவுக்குசங்கர் அ.தி.மு.க. தேர்தல் குழு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று நேற்று சமூக வலைதளங்களில் செய்தி பரவியது,. தொடர்ந்து அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் ஒரு அறிக்கையும் வெளியானது.
அந்த அறிக்கையில் அ.தி.மு.க. தேர்தல் குழு ஆலோசகராக கழக உறுப்பினராக பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் அவர்களை தலைமை கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின் ஏக மனதுடன் நியமனம் செய்கிறேன் என்று கூறி இருந்தார்.
இது தவறான செய்தியாகும். வேண்டுமென்றே எடப்பாடி பழனிசாமி பெயரில் சிலர் போலி அறிக்கை வெளியிட்டு உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. நேற்று தவறான செய்தியை வெளியிட்டமைக்கு www.tn96news.com வருத்தம் தெரிவித்து கொள்கிறது.