கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து திட்டங்குளம் காய்கறி சந்தைக்கு பஸ் வசதி ; வியாபாரிகள் சங்க பேரவை கூட்டத்தில் வலியுறுத்தல்

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவையின் வடக்கு மாவட்டக்கூட்டம் திட்டங்குளம் .தினசரி காய்கறிச் சந்தையில் நடைபெற்றது.
வடக்கு மாவட்டத்தலைவர் நாஞ்சில் குமார் தலைமை தாங்கினார், திட்டங்குளம் தினசரிச்சந்தை தலைவர் அழகுராஜா என்றபன்னீர்செல்வம், பொருளாளர் சின்ன மாடசாமி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், மற்றும் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவையின் மாநிலத்தலைவர் முத்துக்குமார் சிறப்புரையாற்றினார்.

மாநிலப்பொருளாளர் அரிகிருஷ்ணன், கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்புத் தலைவர் க.தமிழரசன், நிர்வாகி முனைவர். ஆ.சம்பத்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்
கூட்டத்தில் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து திட்டங்குளம் தினசரி காய்கறிச்சந்தைக்கு பஸ் வசதி செய்து தரவேண்டும் என்றும் விளாத்திகுளம் தூத்துக்குடி மார்க்கமாக செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் நின்று செல்லும் வகையில் பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டன.
மாவட்டச்செயலாளர் பாலமுருகன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் திரளான வியாபாரிகள் கலந்துகொண்டனர்.
