• May 17, 2024

புதுப்பெண் கொலையில் கள்ளக்காதலன் உள்பட 5 பேர் கைது

 புதுப்பெண் கொலையில் கள்ளக்காதலன் உள்பட 5 பேர் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தில் ஒரு கிணற்றில் கடந்த 10 ம் தேதி சாக்கு முட்டையில் அழுகிய நிலையில் ஒரு இளம் பெண் உடல் மிதந்தது இது பற்றி கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கிணற்றில் பிணமாக மிதந்தவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள இருவாணிவயல் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகள் வினோதினி !வயது 19) என்பது தெரிய வந்தது. திருமணமாகி 4 மாதங்களே ஆன புதுப்பெண்ணை அவரது கள்ளக்காதலன் கடையநல்லூர் அருகே உள்ள வலசை வடக்கு காலனி பகுதியைச் சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டர் மனோரஞ்சித் (வயது 22)என்பவர் அடித்து கொலை செய்து அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசி சென்றது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து மனோ ரஞ்சித், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதே ஊரைச் சேர்ந்த மகாபிரபு (வயது 27) பரத் (வயது 21) கடையநல் லூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த மணிகண்டன்
(வயது 21) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ஆகிய 5 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள். நீதிபதி கைது செய்யப்பட்ட மனோ ரஞ்சித் உள்ளிட்ட 4 பேர்களை பாளையங் கோட்டை மத்திய சிறையிலும் 17 வயது சிறுவனை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *