கோவில்பட்டி வட்டம் மூப்பன்பட்டி கிராமத்தில் மக்கள் களம் நிகழ்ச்சி

கோவில்பட்டி வட்டத்திற்குட்பட்ட மூப்பன்பட்டி கிராமத்தில் இன்று (20.8.2023) தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் பெ.கீதா ஜீவன் ஆகியோர் தலைமையில் மக்கள் களம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார்.
பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு கோரிக்கைகள் குறித்து கனிமொழி, கீதாஜீவன் ஆகியோர் கேட்டறிந்தார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தபெ.ஜெகன் , சார் ஆட்சியர் (தூத்துக்குடி)/ கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் (பொ) ரவ்குமார்,இ.ஆ.ப., அவர்கள், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி.சு.கஸ்தூரி அவர்கள், கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் திரு.கா.கருணாநிதி அவர்கள், கோவில்பட்டி வட்டாட்சியர் திரு.லெனின், மூப்பன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.லிங்கேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.
