நீட் தேர்வை எதிர்த்து, தூத்துக்குடியில் தி. மு. க.வினர் உண்ணாவிரதம்
நீட் தேர்வை எதிர்த்தும் ஆளுநரை கண்டித்தும் தி. மு. க.இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பாக தூத்துக்குடியில் இன்று ஒருநாள் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.
உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்கள் பி கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் உண்ணாவிரத முடிவில் மாலை 5 மாநில துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம். பி., பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
நிகழ்வில் மேயர் ஜெகன் பெரியசாமி, வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் மற்றும் கழக ஒன்றிய நகர செயலாளர்கள் மாவட்ட அணி அமைப்பாளர்கள் மாவட்ட இளைஞர் துணை அமைப்பாளர்கள் மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்