• June 8, 2025

கோவில் விழா : பக்தர்கள் பால்குடம் சுமந்து ஊர்வலம் 

 கோவில் விழா : பக்தர்கள் பால்குடம் சுமந்து ஊர்வலம் 

கோவில்பட்டி சிந்தாமணி விநாயகர் கோவிலில் நடந்த 8ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் எடுத்து  நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சிந்தாமணி விநாயகருக்கு காலை 5 மணிமுதல் மஹா கணபதி ஹோமம், மஹா பூர்ணாகுதி,பால்குடம் தீர்த்த குடம் அழைப்பு,21 வகையான சிறப்பு அபிஷேகங்கள்,கோபுர கும்பாபிஷேகம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகம், அலங்கார தீபாரதனை உள்பட விசேஷ பூஜைகள் நடந்தது.மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

பக்தர்கள் பெருமாள் கோவில் முன்பிருந்து பால்குடம் சுமந்து ஊர்வலமாக விநாயகர் கோவிலுக்கு வந்தடைந்தனர்.பின் விநாயகருக்கு பாலாபிஷேகம் நடந்தது.

 பூஜைகளை அர்ச்சகர் லட்சுமி நாராயணன்,தியாகராஜன் ஆகியோர் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் பால்ராஜ் தலைமையில் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *