கோவில் விழாவில் விளக்கு பூஜை

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் 10வது தெரு முத்துமாரியம்மன் திருக்கோவில் வைகாசி மாத கொடை விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு விளக்கு பூஜையை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர் எம்ஆர்வி கவியரசன், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் அம்பிகை பாலன்,நகர அவைத் தலைவர் அப்பாசாமி,மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் போடுசாமி, அதிமுக நிர்வாகிகள் ஹரிஹரன்,கெங்காராஜ் மற்றும் பக்தர்கள் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்
