• June 8, 2025

சிபிஎஸ்இ தேர்வில் கோவில்பட்டி காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி பள்ளி  மாணவர்கள் சாதனை

 சிபிஎஸ்இ தேர்வில் கோவில்பட்டி காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி பள்ளி  மாணவர்கள் சாதனை

சிபிஎஸ்சி பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிற்கான மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

 கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி சிபிஎஸ்இ பள்ளி பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. 

காமராஜ் சிபிஎஸ்சி பள்ளியை சேர்ந்த சஞ்சய் பரத் என்ற மாணவர் 500க்கு 482 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார் . (தமிழ் 97, ஆங்கிலம் 94, கணிதம் 100, அறிவியல் 94, சமூக அறிவியல் 97).

இரண்டாம் இடம் சிந்துஜா 462/500, மூன்றாம் இடம் அனுஷ்கா ஜெயஸ்ரீ 446/500 பெற்றனர். 

தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டும் 100% தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். 

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அபிராமி என்ற மாணவி 451/500 மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார். இதில் ஒரு மாணவரை தவிர தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவியர்களும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

அதிக மதிப்பெண்கள் மற்றும் தேர்ச்சி அடைந்த அனைவரையும் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் பழனி செல்வம், உப தலைவர் செல்வராஜ் , செயலாளர் ஜெயபாலன் பொருளாளர் சுரேஷ்குமார்  பள்ளியின் செயலாளர் செல்வகணேஷ்,கண்ணன் மற்றும் உறுப்பினர்கள் பாஸ்கர், கண்ணன் , சண்முகசுந்தரம் , பாஸ்கரன், ராஜாராம் , பள்ளியின் முதல்வர் ஜெயக்குமார் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *