அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செயல்பாடுகள் சமீப காலமாக சரியில்லை. அண்ணாமலை கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.. இது பற்றி பா.ஜ.க. மேலிடத்தில் புகார் அளித்துள்ளோம். பல முறை எச்சரித்தும் அண்ணாமலை எங்களை அலட்சியப்படுத்துகிறார். எனவே பா.ஜ.க.வுடன் தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் இல்லை. இது தான் அ.தி.மு.க. கட்சி நிலைப்பாடு. கூட்டணி முறிவால் அ.தி.மு.க.வுக்கு இழப்பு […]
தமிழ்நாட்டிற்கான திட்டங்களுக்கு பா.ஜ.க.அரசு முக்கியத்துவம் அளிப்பதில்லை; தி.மு.க.எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. வரும் 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும் இந்த சிறப்பு கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், இந்த சிறப்பு கூட்டத்தொடரில் முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் […]
திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த் (வயது 44). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மஞ்சுளா (41). அந்த பகுதியில் மஞ்சுளாவின் உறவினர் விக்னேஸ்வரி என்ற அம்மு வசித்து வந்தார். இவர்கள் 3 பேரும் சேர்ந்து ஏலச்சீட்டு, நகை பண்டு, மளிகை பண்டு, கடன் கொடுப்பது ஆகிய சீட்டுகளை கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வந்தனர். அவர்களிடம் பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த நம்பி விஜயகுமார் உள்பட சுமார் […]
மறைந்த தலைவர்களை கொச்சைப் படுத்துவதை நிறுத்த வேண்டும்; அண்ணாமலைக்கு டி.ஜெயக்குமார் வேண்டுகோள்
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா 115 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் சென்னை அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி, தலைமை நிலைய […]
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையில், உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவோம்’ என்று அறிவிக்கப்பட்டது. தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், பல்வேறு அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்தாலும், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் அந்த பட்டியலில் இடம்பெறாமலேயே இருந்து வந்தது. இதனிடையே, தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 […]
மதுரை-புனலூர் ரெயில்கள் சாத்தூர், கோவில்பட்டியில் நின்று செல்லும்; தெற்கு ரெயில்வே அறிவிப்பு
தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- பயணிகளின் வசதிக்காக மதுரை – புனலூர் – மதுரை ரெயில்கள் (16729/16730) சாத்தூர், கோவில்பட்டி ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். அதன்படி புனலூர் செல்லும் ரெயில் சாத்தூர், கோவில்பட்டி ரெயில் நிலையங்களில் இருந்து முறையே அதிகாலை 12.30, 12.48 மணிக்கு புறப்படும். புனலூரில் இருந்து மதுரை செல்லும் ரெயில் இந்த ரெயில் நிலையங்களிலிருந்து முறையே அதிகாலை 1.22, 1.40 மணிக்கு புறப்படும். மேலும் திருச்சி- ராமநாதபுரம் […]
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- இன்று காலை வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த மூன்று தினங்களில் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 13-9-2023 மற்றும் 14-9-2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது […]
நீலகிரி மாவட்டம் கூடலூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. எனவே பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. கேரள மாநிலத்தின் அண்டை மாவட்டங்களாக உள்ள கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, திருப்பூர், தென்காசி, தேனி ஆகிய 6 மாவட்டங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா எல்லையோர தமிழக பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் மருத்துவ அதிகாரிகள் அந்த வழியாக செல்லும் வாகனங்களை கண்காணித்து காய்ச்சல் அறிகுறியுடன் எவரேனும் […]
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சத்ய நாராயணன் (சத்யா). இவர் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவித்துள்ளதாகவும், தன் சொத்து மதிப்பை மறைத்து தி.நகர் தொகுதியில் போட்டியிட்டதாகவும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து 2 மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அ.தி.மு.க. முன்னாள் […]
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறியதால், உண்மையை வெளிக்கொண்டு வர தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சி காலத்தின் போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூந்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
