• June 8, 2025

நிபா வைரஸ்: தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு – மா.சுப்பிரமணியன்

 நிபா வைரஸ்: தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு – மா.சுப்பிரமணியன்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. எனவே பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. கேரள மாநிலத்தின் அண்டை மாவட்டங்களாக உள்ள கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, திருப்பூர், தென்காசி, தேனி ஆகிய  6 மாவட்டங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளா எல்லையோர தமிழக பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் மருத்துவ அதிகாரிகள் அந்த வழியாக செல்லும் வாகனங்களை கண்காணித்து காய்ச்சல் அறிகுறியுடன் எவரேனும் உள்ளனரா என்பது குறித்து பரிசோதனை நடத்தி வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு இருப்போருக்கு உடனடியாக சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 19 பகுதிகளில் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் மாநில அளவில் மேலும் 6 புதிய மாவட்ட மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.1100 கோடி மதிப்பில் கட்டிடப்பணிகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *