மதுரை-புனலூர் ரெயில்கள் சாத்தூர், கோவில்பட்டியில் நின்று செல்லும்; தெற்கு ரெயில்வே அறிவிப்பு
தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பயணிகளின் வசதிக்காக மதுரை – புனலூர் – மதுரை ரெயில்கள் (16729/16730) சாத்தூர், கோவில்பட்டி ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.
அதன்படி புனலூர் செல்லும் ரெயில் சாத்தூர், கோவில்பட்டி ரெயில் நிலையங்களில் இருந்து முறையே அதிகாலை 12.30, 12.48 மணிக்கு புறப்படும்.
புனலூரில் இருந்து மதுரை செல்லும் ரெயில் இந்த ரெயில் நிலையங்களிலிருந்து முறையே அதிகாலை 1.22, 1.40 மணிக்கு புறப்படும்.
மேலும் திருச்சி- ராமநாதபுரம் – திருச்சி ரெயில்கள் (16849/16850) கீரனூர் ரெயில் நிலையத்தில் கூடுதலாக நின்று செல்லும். ராமநாதபுரம் செல்லும் ரெயில் காலை 7.28 மணிக்கும் திருச்சி செல்லும் ரெயில் இரவு 7.01 மணிக்கும் கீரனூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
,மேற்கண்டவாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.