கோவில்பட்டியில் முதியோர் இல்லத்தில் ஜே.சி.ஐ. சார்பில் அன்னதானம்

கோவில்பட்டி ஜே.சி.ஐ. சார்பில் செப்டம்பர் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஜே.சி.ஐ. வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு சேவை திட்டங்களில் ஒன்றாக கோவில்பட்டி கத்ரேசன் கோவில் சாலையில் உள்ள வெளிச்சம் முதியோர் இல்லத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஜே.சி.ஐ.. தலைவர் தீபன்ராஜ், செயலாளர் சூர்யா, இணை செயலாளர் அருண் பிரசாத்,வெளிச்சம் முதியோர் இல்ல நிர்வாகி ராமையா பாண்டியன்,சமூக ஆர்வலர் முத்து முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
