• June 7, 2025
ஆன்மிகம்

உலகில் முதலில் தோன்றிய சிவன் கோவில் சிறப்புகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று உத்தரகோசமங்கை. ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உத்தரகோச மங்கை ஆலயம் உள்ளது.இதுவே உலகில் முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது. ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.ராமாயண காலத்திற்கு முன்பு இருந்தே, இந்தக் கோவில் சிறப்பு பெற்று விளங்கியதாக […]

சினிமா

ஆர்.ஜே.பாலாஜியின் `வீட்ல விசேஷம்’ டிரைலர் வெளியானது

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பதாய் ஹோ. இந்த திரைப்படம் தமிழில் ‘வீட்ல விசேஷம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.தமிழ் ரீமேக்கை என்.ஜே.சரவணனுடன் இணைந்து நடிகர், இயக்குனர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பன்முக திறமை கொண்ட ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார். சத்யராஜ், அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, யோகி பாபு, புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். செல்வா […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புதுரோட்டில் வடிகால் அமைக்கும் பணி; அடுத்து என்ன செய்யவேண்டும்?

கோவில்பட்டி நகரில் மிக முக்கியமான சாலை புதுரோடு ஆகும். தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி ரெயில் நிலையத்துக்கும், சாத்தூர், சிவகாசி வழியாக வரும் வரும் வாகனங்கள் தூத்துக்குடி செல்வதற்கும் இந்த புதுரோடு தான் பிரதான சாலையாகும். இந்த சாலையில் வணிக நிறுவனங்கள், வங்கிகள், ஏ.டி.எம்.மையங்கள் அதிகம் உள்ளன. எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் மழை பெய்யும்போது தண்ணீர் தேங்கி இருசக்கர வாகன ஓட்டிகளை பயமுறுத்தும். எந்த இடத்தில் பள்ளம் இருக்கிறது என்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் திணறுவார்கள்பல […]

செய்திகள்

பாட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவர் ஆகிறார் அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சியின் அடுத்த தலைவர் பொறுப்பை முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் ஏற்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னை, திருவேற்காட்டில் வரும் 28ஆம் தேதி பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இப்பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகவும், கடந்த 25 ஆண்டுகளாக பா.ம.க. தலைவராக இருந்த ஜி.கே.மணி பா.ம.க. சட்டமன்ற கட்சி தலைவராக தொடர்வார் என்றும் கூறப்படுகிறது.10 மாவட்டங்களில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவை அடுத்து அவருக்கு தலைமைப் பதவி அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு […]

செய்திகள்

தி.மு.க.உறுப்பினர்கள் ஆதரவுடன் குற்றாலம் பேரூராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றியது

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி மன்றத்திற்கும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் இங்குள்ள 8 வார்டுகளில் தி.மு.க. 4 வார்டுகளிலும் அ.தி.மு.க. 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தன.இரு கட்சிகளும் சம அளவில் வெற்றி பெற்றதால் தலைவர் பதவி யாருக்கு? என்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் யாரும் இந்த தேர்தலில் கலந்து கொள்ளவில்லை.இதனால் 50 சதவீத உறுப்பினர்களுக்கு […]

செய்திகள்

நரிக்குறவ பெண்களை தரையில் அமரவைத்து அன்னதானம்: கோவில் செயல் அலுவலர், சமையலர் வேலைநீக்கம்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தலசயன பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்விய தேசங்களில் 63-வது திவ்வியதேசம் எனப் போற்றப்படும் இந்த கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது.கடந்த 2021-ம் ஆண்டு அன்னதானம் சாப்பிட வந்த நரிக்குறவ இன மக்களைச் சாப்பிட விடாமல் கோவில் நிர்வாகத்தினர் வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அந்த கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அன்னதான பாகுபாடு குறித்து வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நரிக்குறவ பெண்ணுடன் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு பா.ஜனதா நிர்வாகிகள் பட்டியல்; மாவட்ட தலைவர் வெளியிட்டார்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் பட்டியலை மாவட்ட தலைவர் ஆர்.சித்ராங்கதன் வெளியிட்டுள்ளார்.கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாநில பொதுசெயலாளர் பொன் பாலகணபதி, மாவட்ட பார்வையாளர் சசிகலா புஷ்பம் ஆகியோரின் ஒப்புதலுடன் நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதாக அவர் கூறி இருக்கிறார்.நிர்வாகிகள் விவரம் வருமாறு:-மாவட்ட துணை தலைவர்கள்- சி.தங்கம், எஸ்,சரஸ்வதி, டி,பல்க் பெருமாள், எஸ்.பி.வாரியார், எஸ்.சிவராமன், எஸ்.செல்வராஜ், டி,சுவைதார், எஸ்,ரேவதி.மாவட்ட பொது செயலாளர்கள்- ஆர்.சிவமுருக ஆதித்தன், டி.ராஜா, […]

தூத்துக்குடி

அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

தூத்துக்குடி ️தருவைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலமருதூர் பகுதியை சேர்ந்த பொய்யாழி மகன் போஸ் (வயது 28) என்பவருக்கும் வேடநத்தம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் மாரிராஜ் (26) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.இந்த நிலையில் நேற்று மாரிராஜ் மற்றும் அவரது நண்பரான வேடநத்தம் பகுதியை சேர்ந்த சுப்புராஜ் மகன் கார்த்திக் (24) ஆகிய 2 பேரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் போஸ் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை […]

செய்திகள்

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: அ.தி.மு.க வேட்பாளர்கள் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் 250 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில், தமிழகத்தை சேர்ந்த 18 பேர் அடங்குவர். இவர்களில் தி.மு.க.வை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்க இருக்கிறது.இந்நிலையில் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. 31-ந்தேதி மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, அ.தி.மு.க.வின் பலம் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி ; கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் 1-ந் தேதி வரை

தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு பணி (ஜமாபந்தி) அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இன்று தொடங்கியது.அதன்படி தூத்துக்குடி தாலுகா ஜமாபந்தி அலுவலராக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு ஜமாபந்தியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தூத்துக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட உமரிக்கோட்டை, கீழத்தட்டப்பாறை, மேலத்தட்டப்பாறை, அல்லிக்குளம், மறவன்மடம், செந்திலாம்பண்ணை, தெற்குசிலுக்கன்பட்டி ஆகிய 7 கிராமங்களுக்கான கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. அந்த பகுதி பொதுமக்கள் திரளானவர்கள் வந்து மனு கொடுத்தனர்.உட்பிரிவுபட்டா கோரி 8 பேரும், முதியோர் உதவித்தொகை கோரி […]