ராதாபுரம் அருகே உள்ள வேப்பளங்குளத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 50). விவசாயி. இவர் இன்று நெல்லையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக இன்று காலை வந்தார்.பிரதான வாயில் வழியாக செல்லாமல் மற்றொரு பாதை வழியாக கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்ற அவர் திடீரென கையில் மறைத்து வைத்திருந்த விஷ பாட்டிலை எடுத்து குடித்தார். இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் ஓடி சென்று பாட்டிலை தட்டிவிட்டனர். பின்னர் […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 13-ந்தேதி வெளியான திரைப்படம் 'டான்'. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மேலும் டான் படத்தில் சூரி, சமுத்திரக்கனி, விஜய் டிவி புகழ் சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை […]
கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் நேற்று (29.5.2022) கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் விளாத்திகுளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அம்மாசி மகன் கார்த்திக்ராஜ் (33) என்பவர் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக காரில் […]
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி இளம் செஞ்சிலுவை சங்கம் சார்பாக உலக ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு “தற்கால உணவு முறையும் ஆரோக்கியமும்” என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி நடைபெற்றது.போட்டியில் பங்கேற்ற மாணவிகளின் படைப்புகளை நடுவர் குழுவினர் ஆய்வு செய்து வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி சான்றிதழ்கள் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார். இளம் செஞ்சிலுவை சங்கம் ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். நர்கீஸ் பேகம் உள்பட பலர் கலந்து […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்,’கூட்டத்தில், வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அமைச்சருமான கீதாஜீவன் பேசினார்.. அவர் கூறியதாவது:-கடந்த தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சராக இருந்து கலைஞர் புதிய தலைமை செயலகத்தை தனது நேரடி பார்வையில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து கட்டினார். அப்பகுதியில் […]
தூத்துக்குடியில் நடைபாதையில் நிறுத்தும் வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயம்: மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. வெளிநடப்பு
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் இன்று காலை மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.35வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலரும், மாமன்ற எதிர்கட்சி தலைவருமான வீரபாகு பேசுகையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் சொத்து வரி 150 சதவீதம் உயர்த்தி உள்ளனர். இதனால் மக்கள் மிகவும் பாதிக்கபட்டுள்ளனர்.அதிலிருந்தே இன்னும் மக்கள் மீளாத நிலையில் தற்போது மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் தூத்துக்குடி மக்களை மிகவும் பாதிக்கும் வகையில் தீர்மானம் 26ல் குறிப்பிட்டுள்ள வி.இ […]
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு இலந்தைகுளம் பகுதியில் “மாற்றத்தை தேடி” எனும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வடக்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் கணபதி, கயத்தார் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் அந்தோணி திலீப், காசிராஜன் உள்ளிட்ட காவல்துறையினர் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசுகையில் கூறியதாவது:-‘மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு என்பது […]
கோவில்பட்டி பஸ் நிலையங்களை இணைக்கும் சர்க்குலர் பஸ்கள்; பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம்
கோவில்பட்டி நகருக்குள் நெருக்கடியை தவிர்க்கும் வைகையில் பைபாஸ் சாலையில் புதிதாக கூடுதல் பஸ் நிலையம் திறக்கபட்டது, ஆனால் அந்த பஸ் நிலையம் தொடர்ந்து இயங்கவில்லை. தற்போது பஸ்கள் எதுவும் பஸ் நிலையத்துக்குள் செல்வதில்லை. பஸ் நிலையம் சமூக விரோதிகளின் கூடாமாக மாறிவிட்டது, வெளியூர்களில் இருந்து வரும் பஸ்கள் பஸ் நிலையம் வெளியே நிறுத்தி பயணிகள் ஏற்றியும் இறக்கியும் செல்கிறார்கள். நள்ளிரவு நேரங்களில் சர்வீஸ் சாலையில் உள்ள பஸ் நிலையம் அருகில் வருவது கிடையாது. பாலத்தின் கீழ்புறத்தில் நடுரோட்டில் […]
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இதனையடுத்து வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. தி.மு.க. தரப்பில் கிரிராஜன், கல்யாண சுந்தரம், ராஜேஸ்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர்.மேலும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, தமிழக மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை அறிவித்தது. இன்று ப.சிதம்பரம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை […]
ஒவ்வொரு வீட்டின் பின்புறமும் குறைந்தபட்சம் ஒரு அடி இடம் விடுவது வழக்கம். அது போல் கோவில்பட்டி அன்னை தெரசா நகர் பகுதியில் இரண்டு வீடுகளுக்கு இடையே சிறிது இடைவெளி காணப்பட்டது.அந்த இடைவெளிக்குள் நேற்று ஒரு பசு மாடு சென்றுவிட்டது. பின்னர் அந்த மாட்டினால் வெளியே வரமுடியவில்லை. சுவர் இடுக்கில் சிக்கிக்கொண்ட அந்த பசுமாடு அலறியது. இந்த சத்தம் கேட்டது அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர், இது பற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து […]