• June 9, 2025
தூத்துக்குடி

2 வாரங்களுக்கு ஒரு முறை பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம்; தூத்துக்குடி காவல்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-கடந்த 10.5.2022 அன்று சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கையின் போது தமிழக முதல்வர் மானியக் கோரிக்கை அறிவிப்பு எண் 53ன் படி அரசாணை எண் 259 உள்துறை (காவல் 13) இன் கீழ் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களிலும் 2 வாரங்களுக்கு ஒரு முறை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.மேற்படி அறிவிப்பின்படி […]

செய்திகள்

அ.தி.மு.க.பொதுக்குழு கூடியது; ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேறவில்லை

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு இருக்கிறது. எனவே அவரை பொதுசெயலாளராக தேர்வு செய்ய சிறப்பு தீர்மானம் கொண்டுவர திட்டமிடப்பட்டது.இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோர்ட்டில் மனு செய்யபட்டது, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது. ஆனால், வரையறை செய்த 23 தீர்மானங்கள் தவிர்த்து, வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கஞ்சா வேட்டை; 14 வழக்குகளில் தொடர்புடையவர் கைது

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் நேற்று (22.6.2022) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில்பட்டி கதிரேசன் கோவில் மலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் முத்துகுமார் (வயது 28) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனே முத்துகுமாரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ […]

பொது தகவல்கள்

பிளஸ் -2 வெற்றிக்குபிறகு என்ன படிக்கலாம்?

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவ, மாணவிகள் அடுத்து என்ன படிக்கலாம் என்ற சிந்தனையில் இருப்பார்கள். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, ,மருத்துவ கல்லூரி என்று அலைய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கு முன்னதாக தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் என்னென்ன படிப்புகள் இருக்கின்றன, அவற்றில் நாம் என்ன படிக்கலாம் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.Science Courses (3 Years)Bsc PhysicsBsc ChemistryBsc BotanyBsc ZoologyBsc Computer scienceBsc MathematicsBsc PCMBsc CBZBsc ForestryBsc Dietician & […]

செய்திகள்

10- வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணை தேர்வு; 27-ந் தேதி முதல்

10- வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியருக்கு வரும் 27. 6. 2022 முதல் 4. 7. 2022 வரையிலான நாட்களில் அவரவர் படித்த பள்ளியிலேயே நேரில் சென்று துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள், அல்லது தான் படித்த பள்ளியில் விண்ணப்பிக்க வேண்டும். 10- வகுப்பு […]

கோவில்பட்டி

ஜன சங்கத்தின் நிறுவனர் தினம் கொண்டாட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் ஜன சங்கத்தை நிறுவிய சியாம பிரசாத் முகர்ஜி நினைவு தினத்தை ஒரு வாரம் சேவை தினமாக கொண்டாடப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக இன்று கோவில்பட்டி பஸ் நிலையம் அருகில் சியாம பிரசாத் முகர்ஜி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவிஅஞ்சலி செலுத்தப்பட்டது. பாரதி ஜனதா கட்சியின் நகர தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் விஜயகுமார் .அசோக், துணைத் தலைவர் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டனர் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் வெங்கடேஷ் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி : வெள்ளிக்கிழமை மின்தடை செய்யப்படும் இடங்கள்

கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக, சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்த்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற இருக்கிறது.எனவே, அன்றையை தினம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கோவில்பட்டி உப மின் நிலையத்தின் நடராஜபுரம் தெரு, மூப்பன் பட்டி, வேலாயுதபுரம் மெயின் ரோடு, […]

கோவில்பட்டி

பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் இன்று பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.2017- ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் 15 சதவீதம் உயர்வுடன் ஓய்வூதியம் அமல்படுத்த கோரியும், கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்கக்கோரியும், நிலுவையில் உள்ள மருத்துவப் படியை வழங்கவும், 2019-ல் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு மறுக்கப்பட்ட ஓய்வூதிய பலன்களை வழங்கக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் சுப்பையா, துணை […]

கோவில்பட்டி

கழுகுமலையில் தீப்பெட்டி ஆலையில் பயங்கர தீ விபத்து

கோவில்பட்டி அருகே கழுகுமலையில் காளவாசல் பஸ்நிறுத்தம் அருகே இக்னேஷியஸ் என்பவர் மனைவி செல்வம் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை உள்ளது. இன்று காலை 9 மணிக்கு தீக்குச்சிகள் உள்ள குடோனில் தீக்குச்சிகள் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பற்றிகொண்டது. உடனடியாக அந்த அறை முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.இது பற்றி அறிந்ததும் கழுகுமலை மற்றும் கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வாகனங்களில் வீரர்கள் விரைந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் முத்து […]

கோவில்பட்டி

கொலை முயற்சி: தந்தை-மகன் கைது

கோவில்பட்டி தோணுகால் மேற்கு தெருவை சேர்ந்தவர் சுகுமாறன் (வயது 48). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் (64) என்பவருக்கும் இடையே பொது கால்வாயிலிருந்து தங்களது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவந்தது.இந்த முன்விரோதம் காரணமாக சுகுமாறனிடம், முருகன் மற்றும் அவரது மகன் சமுத்திரவேல் (33) ஆகிய இருவரும் சேர்ந்து தகராறு செய்து அவரை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.இதுகுறித்து சுகுமாறன் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய […]