ஜன சங்கத்தின் நிறுவனர் தினம் கொண்டாட்டம்
பாரதிய ஜனதா கட்சியின் ஜன சங்கத்தை நிறுவிய சியாம பிரசாத் முகர்ஜி நினைவு தினத்தை ஒரு வாரம் சேவை தினமாக கொண்டாடப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று கோவில்பட்டி பஸ் நிலையம் அருகில் சியாம பிரசாத் முகர்ஜி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி
அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாரதி ஜனதா கட்சியின் நகர தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் விஜயகுமார் .அசோக், துணைத் தலைவர் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டனர்
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்னை கேசவன், மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜ். மாநில மாவட்ட அணி பிரிவு தலைவர்கள். பொதுச் செயலாளர்கள். நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதே போல் கோவில்பட்டி சுற்று வட்டாரங்களில் 6 இடங்களில் கொடியேற்ற நிகழ்ச்சியும், அன்னாரது புகைப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.