10- வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணை தேர்வு; 27-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
10- வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியருக்கு வரும் 27. 6. 2022 முதல் 4. 7. 2022 வரையிலான நாட்களில் அவரவர் படித்த பள்ளியிலேயே நேரில் சென்று துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள், அல்லது தான் படித்த பள்ளியில் விண்ணப்பிக்க வேண்டும். 10- வகுப்பு தோல்வி அடைந்த மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் 125 ரூபாய், ஆன்லைன் பதிவு கட்டணம் 50 ரூபாய், மொத்த கட்டணம் 175 ரூபாய்
தேர்வு கட்டணத்தை சேவை மையங்களில் கட்டலாம். அல்லது பள்ளியிலேயே நேரடியாக பணமாக செலுத்தலாம்.
10- வகுப்பு வகுப்பு துணைத் தேர்வுகள் அட்டவணை
- 8. 2022. – தமிழ்
- 8. 2022. ஆங்கிலம்
- 8. 2022. கணிதம்
- 8. 2022. அறிவியல்
- 8. 2022. சமூகஅறிவியல்