கோவில்பட்டியிலிருந்து சாத்தூருக்கு புறப்பட்டது… அந்த பஸ்.. எல்லா நிருத்தங்களிலும் நின்று செல்லும்..இந்த பஸ்சைவிட்டா ஒருமணி நேரம் கழிச்சுதான் அந்த ஊருக்கு செல்லவேண்டிய பஸ் வரும்.இதனால் பஸ்சில் பயணிகள் முண்டியடித்து கொண்டு ஏறினார்கள். பஸ் நிரம்பி வழிந்தது. கண்டக்டர் ..பாய்ந்து பஸ்சில் ஏறினார். உள்ளே போங்க, உள்ளே போங்க..வாசலில நிக்காதீங்க..என்று கத்தினார்.எங்கேய்யா போறது..கால்வைக்க கூட இடம் இல்லை.மூச்சுகூட விடமுடியல..உள்ளே போ..உள்ளே போன்னா எங்கய்யா போறது..என்றார் ஒருபாட்டி.உடனே கண்டக்டர்..கோபப்படாத. பாட்டி..கொஞ்சம் உள்ளே போ..இன்னும் ஆட்கள் ஏறணுமுல்ல..எல்லாம் கீழே நிக்காங்க..என்று மென்மையாக […]
திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் நேற்று சசிகலா, சுற்றுப்பயணம் செய்தார். மன்னார்சாமி கோவில் பகுதியில் அவர் ஆதரவாளர்கள் மத்தியில் பேசியதாவது:-நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு இருந்த அ.தி.மு.க.வின் இன்றைய நிகழ்வுகள் ஒவ்வொரு தொண்டனும் வெட்கமும், கவலையும் படக்கூடிய ஒன்றாக இருக்கிறது.தொண்டர்கள் தான் உயிர், கட்சி உடல். தொண்டர்கள் இயங்கினால் தான் கட்சி இயங்கும். தொண்டர்கள் அடங்கி விட்டால் கட்சி முடங்கி விடும் என்று எம்.ஜி.ஆர். கூறியதை மறக்காமல் கடைபிடித்தால்தான் அ.தி.மு.க. நிலைக்கும்.பசுந்தோல் போர்த்திய […]
வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள குப்பத்தாமோட்டூர் நடுத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 20) வேலூரில் ஆர்த்தோ டெக்னீசியன் படித்து வருகிறார்.அதே தெருவை சேர்ந்த 18 வயது மாணவி கல்லூரியில் படித்து வருகிறார். ஒரே தெருவில் வசிப்பதால் இருவரும் ஒன்றாக பழகினர்.இன்று காலை மாணவி கல்லூரிக்கு செல்வதற்காக இன்று திருவலம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது சதீஷ்குமார் அங்கு வந்து அவரிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது இருவரும் ஆவேசமாக பேசிக் கொண்டனர்.ஒரு கட்டத்தில் […]
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி கோவில்பட்டி கிழக்கு மற்றும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய 2 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதவராஜா தலைமையிலான போலீசார் வேலாயுதபுரம் பகுதியில் பொதுமக்களிடமும், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பஞ்சவர்ணம் தலைமையிலான போலீசார் மார்தாண்டப்பட்டி பகுதியில் பொதுமக்களிடமும் […]
கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் பூங்கா திறப்பு; 200க்கும் மேற்பட்ட மரங்கள் பராமரிப்பு
தென்மாவட்டங்களில் கோவில்பட்டி ரெயில் நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னையில் இருந்து திருநெல்வேலி வழியாக செல்லும் அனைத்து ரெயில்களும் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்கின்றன, ஒவ்வொரு ரெயிலிலும் கோவில்பட்டி பயணிகள் பயணம் செய்கிறார்கள். அந்த வகையில் இந்த ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது.கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் ரோட்டரி சங்கமும், நாடார் நடுநிலைப்பள்ளி தேசிய பசுமை படையும் இணைந்து 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு தேசிய பசுமைப்படை மாணவர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ரோட்டரி சங்கம் […]
கோவில்பட்டி அருகே உள்ள ஜமீன் தேவர்குளத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் வசந்த் ஆகியோருக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஆர்.சத்யா, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத்தலைவர் பழனிச்சாமி, […]
சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் முன்னணி நடிகைகளுடன் நடித்த அந்நிறுவன உரிமையாளர் ’லெஜெண்ட்’ சரவணன் அருள் தற்போது ஜேடி-ஜெர்ரி (ஜோசப் டி.சாமி மற்றும் ஜெரால்ட் ஆரோக்கியம்) இயக்கத்தில் தி லெஜண்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இரட்டை இயக்குனர்களான ஜேடி – ஜெர்ரி முன்னனி நடிகர்கள் நடித்த பல விளம்பர படங்களை இயக்கியவர்கள். இவர்கள் ஏற்கனவே அஜித் – விக்ரம் நடித்து அமிதாப் பச்சன் தயாரித்த உல்லாசம் படத்தையும், விசில் படத்தையும் இயக்கியுள்ளனர். இந்த படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக, […]
சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி, தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகர் மற்றும் முக்கிய நகரங்களில் பா.ஜனதா சார்பில் உன்னாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்ல் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்காக பஸ்நிலையம் அருகே சாலையோரம் பந்தல் அமைத்து அதனுள் பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. […]
கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் நடராஜன், மேற்கு மாவட்ட தலைவர் வெள்ளத்துரை பாண்டி, அவைத்தலைவர்கள் வெங்கடசாமி, சாமிய்யா, மாநில துணை தலைவர் நம்பிராஜன், தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் சுப்பாராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தமிழக அரசு விவசாயிகளின் விளைபொருட்களுக்கு செஸ் வரி விதித்ததை ரத்து செய்ய வேண்டும். 2020-21-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் […]
10ம்வகுப்பு மற்றும் 12ம்வகுப்பு (2021-2022) தேர்வில் தேர்ச்சி பெற்ற கோவில்பட்டி பள்ளி மாணவ-மாணவிகள் 30பேருக்கு விஸ்வகர்ம நகைத்தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மந்தித்தோப்பு ரோட்டியுள்ள தங்கமஹால் திருமண மண்டபத்தில் நடந்த இந்த விழாவுக்கு விஸ்வகர்ம நகைத்தொழிலாளர் சங்கத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக விஸ்வர்கம மகாஜன சங்கத்தலைவர் பாலமுருகேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையை அவர் வழங்கினர். விஸ்வகர்ம […]