கோவில்பட்டி நகரின் மிக முக்கியமான சாலையாக புதுரோடு கருதப்படுகிறது. இந்த பகுதி வழியாக தூத்துக்குடி செல்லும் கனரக வாகனங்கள் அதிகம் செல்லும். புதுரோடு என்ற பெயருக்கு ஏற்றபடி இந்த சாலை இல்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு.இந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு வாறுகால் அமைப்பதற்காக சாலையின் ஒரு பகுதியில் நகரசபை நிர்வாகத்தின் சார்பில் பள்ளம் தோண்டப்பட்டு பணி முழுமை அடையாமல் இருக்கும் நிலையில் மறுபுறத்தில் ஒரு இடத்தில் சாக்கடையை சாலைக்கு திருப்பி விட்டு இருக்கிறார்கள். இதனால் புதுரோடு […]
அவர் ஒரு ஆரிய பிராமண சூது பிடித்தவர் , இரக்கமில்லாதவர், பார்ப்பன கொடூரக்காரர் என ஏக குற்றசாட்டுகள் பகுத்தறிவு பேசுபவர்களிடம் இருந்து வரும். உண்மையில் நடந்தது என்ன..? அந்த துரோணரின் நிலை பரிதாபமானது.. ஆம், துரோணர் அந்த அரச குடும்பத்து ஆசிரியர், எல்லா விதத்திலும் அரசனுக்கு கட்டுபட்டவர், அவனை மீறி அவர் ஏதும் செய்துவிட முடியாது. சுருக்கமாக சொன்னால் அரச குடும்பத்து அடிமைகளில் ஒருவர். அந்நாளில் ராஜவம்சத்துக்கு மட்டுமே ஷத்ரிய வம்சத்துக்கு மட்டுமே சில பயிற்சிகள் கற்றுகொடுக்கபடும், […]
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் ஆர்.சி தெருவை சேர்ந்தவர் முத்துக்குட்டி (வயது 50). இவரது மகள் ரேஸ்மா (20), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் அப்பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான வடிவேல் மகன் மாணிக்கராஜ் (26) என்பவரை காதலித்து வந்தார்.இவரது காதலுக்கு ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் காதல் ஜோடி இருவரும் ஊரை விட்டு வெளியேறி திருமணம் செய்து […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம் மனு அளிக்கப்பட்டது அந்த மனுவில் கடலையூர் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன் ஏற்பாட்டில் மாநில இளைஞரணி துணை செயலாளர் குருஸ் திவாகர் தலைமையில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி முன்னிலையில், கிளைச் செயலாளர் முத்துகிருஷ்ணன் ஒன்றிய மாணவர் அணி செயலாளர் சொரிமுத்து, ஒன்றிய பொருளாளர் ஈஸ்வரன், கிளைச் செயலாளர் […]
மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க.சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ. ராஜூ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்தும், கட்டண திரும்ப பெற வலியுறுத்தியும், சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடு , அடிக்கடி ஏற்படும் மின் வெட்டு ஆகியவற்றை கண்டித்தும் அ.தி.மு.க.வினர் அரிக்கேன் விளக்கு […]
கோவில்பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் டாக்டர் ராமதாஸ் பெயரில் அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் பின்புறம் அமைந்துள்ள காந்தி மைதானத்தில் மாவட்டசெயலாளர் ராமச்சந்திரன், பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்றினார். பின்பு கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை […]
கோவில்பட்டி சைவ செட்டியார் சங்கத்தின் 49-வது மகாசபை கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். செயலாளர் சேனாபதி, பொருளாளர் களியோகத்து அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சங்கத்தின் துணை செயலாளர் லட்சுமணன், துணை தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். சிறப்பு அழைப்பாளர்களாக ராமையா செட்டியாறம் திருநெல்வேலி சிதம்பரம் செட்டியார் ஆகியோர் கலந்து கொண்டனர்சைவ செட்டியார் சமூகத்தில் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் (6௦௦-க்கு 552) பெற்ற மாணவி ஞானபொற்கொடி லாவண்யா, இரண்டாம் […]
கோவில்பட்டி புதுக்கிராமம் ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு சார்பில், 1௦ மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா புதுக்கிராமம் இல்லத்தார் பள்ளியில் நடந்தது.நிகழ்ச்சிக்கு ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். மருத்துவர் வேலம்மாள், வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மணிமதி […]
உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் நெல்லை மண்டல மாவட்ட நிர்வாகிகளுக்கான சிந்தனை கூட்டம் கோவில்பட்டி பைரவா மஹாலில் நடைபெற்றது.கூட்டத்தில் குடும்ப நிகழ்வுகளை தமிழ் மரபுபடி குறள்நெறிப்படி நடத்திடவும், ஒவ்வொரு திருக்குறள் மன்றங்களிலும் திருக்குறள் ஆசானை உருவாக்கிடவும், திருக்குறளின் புகழை கிராமங்கள் தோறும் பரப்பிடவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதுசிந்தனை கூட்டம் நிகழ்ச்சிக்கு உலக திருக்குறள் கூட்டமைப்பின் தலைவர் திரைப்பட இயக்குனர் சேகர் காணொளி மூலம் தலைமை தாங்கி பேசினார்.உலக திருக்குறள் கூட்டமைப்பின் தூத்துக்குடி மாவட்ட அமைப்பு செயலாளர் தமிழரசன் அனைவரையும் […]
பிரபல டைரக்டரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மே மாதம் உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.இருதயத்துக்கு செல்லும் ரத்த குழாய் வால்வில் சிறிய அடைப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதற்காக உயர் சிகிச்சை எடுத்துக்கொள்ள கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அங்கு டி.ராஜேந்தருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நலம் தேறியது. தொடர்ந்து ஒரு மாதத்துக்கு மேலாக அமெரிக்காவிலேயே தங்கி ஓய்வு எடுத்தார். பூரண குணமடைந்த நிலையில் நேற்று […]