பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு

கோவில்பட்டி புதுக்கிராமம் ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு சார்பில், 1௦ மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா புதுக்கிராமம் இல்லத்தார் பள்ளியில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். மருத்துவர் வேலம்மாள், வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மணிமதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, எதிர்கால வேலை வாய்ப்புகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு விளக்கி கூறினர்.
தொடர்ந்து, 10 மற்றும் 12 -ம் வகுப்பு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு நிர்வாகிகள் வெங்கடேஸ்வரன், மாரி கண்ணன், சங்கர், திருப்பதி கணேசன் மற்றும் புதுக்கிராமம் இல்லத்து பிள்ளைமார் சமுதாய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
