தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு ராபி பருவத்தில் பயிரிடுவதற்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். மாவட்டத்தில் முதல் விதைப்பாக ஆடி 18ம் பெருக்கு முன்னிட்டு முதல்கட்டமாக நிலக்கடலை விதைப்பு செய்து வருகின்றனர். அதன் பின்னர் புரட்டாசி முதல் வாரத்தில் மக்காச்சோளம், உளுந்து, பாசி, வெள்ளைச்சோளம்,கம்பு, மிளகாய், வெங்காயம் பருத்தி பெருமளவில் பயிரிடப்படும்.தனியார் விதை நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு விவசாயிகளை கவரும் வகையில் கிராமம் கிராமமாக தங்கள் நிறுவன விதைகளை விளம்பரம் செய்து வருகின்றன. ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழிக்கு ஏற்ப […]
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு: சி.பி.ஐ.விசாரணை உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது
அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கவனித்து வந்த எடப்பாடி பழனிசாமி அதில் பல டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது.2018ல் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தி.மு.க.வை சேர்ந்த ஆர்.எஸ் பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 4800 கோடி ரூபாய் அளவிற்கு நெடுஞ்சாலை துறை டெண்டரில் முறைகேடு நடந்தாக எடப்பாடிக்கு எதிராக ஆர். எஸ். பாரதி புகார் கூறினார்.சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் […]
கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புதுமை நகரில் புனித பரலோக மாதா திருத்தலம் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆலயத்தின விண்ணேற்பு பெருவிழா வருகிற 6 -ந்தேதி தொடங்கி, 15-ந்தேதி வரை நடக்கிறது.6 -ந்தேதி மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.காமநாயக்கன்பட்டி திருத்தல ஆலய வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கயத்தாறு வட்டாட்சியர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார்.திருவிழாவில் […]
டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் செயலிகள் மூலம் கடன் வாங்கியவர்கள், துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன.இந்த செயலிகள் மூலம், கொரோனா காரணமாக வருமானத்தை இழந்த இந்தியர்களை குறிவைத்து, அவர்களிடம் அதிக வட்டி விகிதங்கள் வசூலிக்கப்பட்டன. மற்றும் அவர்களின் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்தி பணம் பெற்றவர்களை மிரட்டி அவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினர்.இந்த நிலையில் மாநிலங்களவையில் இதுகுறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-டிஜிட்டல் முறையில் […]
கோவில்பட்டி வெங்கடேஷ் நகர் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் மத மாற்றம் செய்யும் முயற்சியில் செயல்பட்டுக் கொண்டிருந்த சிலரை தட்டிக்கேட்டபா.ஜ.க. நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பா.ஜ.க. சார்பில் இன்று (ஆகஸ்டு 2) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காவல் துறை அனுமதி மறுக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன் தலைமையில், கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் அருகே இருந்து, அக்கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர். […]
இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் சல்மான்கான் 1998-ல் படப்பிடிப்பின்போது ஜோத்பூர் காட்டில் அரிய வகை மானை வேட்டையாடியதாக சர்ச்சையில் சிக்கினார். அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.அந்த அரிய வகை மான்களை பிஷ்னோய் சமூகத்தினர் புனிதமாக கருதுவதால் அப்போதே சல்மான்கானுக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்தார். தற்போது லாரன்ஸ் பிஷ்னோய் பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கிறார். ஆனாலும் அவரது ஆட்கள் சமீபத்தில் பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவை சுட்டுக்கொன்றனர்.இதுபோல் சல்மான்கானை கொலை […]
சினிமாப்பட பைனான்சியர் அன்புச்செழியன், கோபுரம் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். இவருடைய கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தங்கமகன், வெள்ளைக்காரதுரை, மருது, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளது.சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மதுரையில் 30 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்புச்செழியன் வீட்டில் காலை 5 மணி முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்=நுங்கம்பாக்கம் காம்தார் […]
ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமராவின் மகளும், சந்திரபாபு நாயுடுவின் உறவினருமான கே. உமா மகேஸ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.உமா மகேஸ்வரி கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று ஐதராபாத், ஜூப்ளி ஹில்ஸில் உள்ள தனது இல்லத்தில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை […]
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் ஆடிப்பூரம் வளைகாப்பு விழா நடைபெற்றது.இதனையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு விநாயகர் முருகன் சுவாமி அம்பாள் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைப்பெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு கொலு மண்டப்பத்தில் வளைகாப்பு விழா கணபதி பூஜையுடன் தொடங்கி, கும்பகலச பூஜை சீர்வரிசை தட்டுகள் வைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் 11 சீர்வரிசை தட்டுகள் கோவில் வளாகத்தை சுற்றி வந்து அம்பாள் சன்னதியில் வளைகாப்பும் […]
கோவில்பட்டி வேலாயுதபுரம் பத்திரகாளியம்மன், காளியம்மன் கோவில் ஆடிப்பொங்கல் திருவிழா; கொடியேற்றத்துடன் தொடக்கம்
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு சொந்தமான அன்னை பத்திரகாளியம்மன், காளியம்மன் திருக்கோவில் ஆடிப்பொங்கல் திருவிழா இன்று (ஆகஸ்டு 1 ) கொடியேற்றத்துடன் தொடங்கியது.காலை 9 மணிக்கு உறவின் முறை தலைவர் வேல்முருகேசன் நாடார் மற்றும் நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள், மண்டகபடிதாரர்கள், மகளிர், இளைஞர் அணியினர், பக்தர்கள் மங்கல பொருட்களுடன் யானை முன் செல்ல வாங்கா முழங்க மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து நாக விநாயகர் கோவிலில் வழிபாடு செய்வார்கள். பின்னர் காலை 1௦.3௦ மணிக்குள் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.கொடியேற்று […]