• June 7, 2025

ஆடி பெருக்கு: நிலக்கடலை விதைப்பு பணி தொடக்கம்

 ஆடி பெருக்கு: நிலக்கடலை விதைப்பு பணி தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு ராபி பருவத்தில் பயிரிடுவதற்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். மாவட்டத்தில் முதல் விதைப்பாக ஆடி 18ம் பெருக்கு முன்னிட்டு முதல்கட்டமாக நிலக்கடலை விதைப்பு செய்து வருகின்றனர். அதன் பின்னர் புரட்டாசி முதல் வாரத்தில் மக்காச்சோளம், உளுந்து, பாசி, வெள்ளைச்சோளம்,கம்பு, மிளகாய், வெங்காயம் பருத்தி பெருமளவில் பயிரிடப்படும்.
தனியார் விதை நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு விவசாயிகளை கவரும் வகையில் கிராமம் கிராமமாக தங்கள் நிறுவன விதைகளை விளம்பரம் செய்து வருகின்றன. ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழிக்கு ஏற்ப கோவில்பட்டி பகுதியில் நிலக்கடலை விதைப்பு பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். புரட்டாசி முதல் வாரத்தில் சிறுதானியங்கள் விதைப்பு செய்ய தயாராகி வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *