டிஜிட்டல் முறையில் கடன்: சந்தேகத்திற்குரிய செயலிகள் மீது நடவடிக்கை- மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

 டிஜிட்டல் முறையில் கடன்: சந்தேகத்திற்குரிய செயலிகள் மீது நடவடிக்கை- மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் செயலிகள் மூலம் கடன் வாங்கியவர்கள், துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன.
இந்த செயலிகள் மூலம், கொரோனா காரணமாக வருமானத்தை இழந்த இந்தியர்களை குறிவைத்து, அவர்களிடம் அதிக வட்டி விகிதங்கள் வசூலிக்கப்பட்டன. மற்றும் அவர்களின் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்தி பணம் பெற்றவர்களை மிரட்டி அவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினர்.
இந்த நிலையில் மாநிலங்களவையில் இதுகுறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் சந்தேகத்திற்குரிய செயலிகள் (ஆப்ஸ்) மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து செயல்படும் இந்த செயலிகள், இந்தியாவில் சில நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆப் மூலம் கடன் வாங்குபவர்கள், பணத்தை திருப்பிச் செலுத்த துன்புறுத்தப்படுகிறார்கள்.
மேலும் இந்த செயலிகளால் மக்களிடமிருந்து பணம் பறிக்கப்படுகிறது. தெலுங்கானா மாநிலத்தில் ஏராளமானோர் இவற்றால் துன்புறுத்தப்பட்டதாக எழுந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களை நிறுவுவதற்கு உதவிய இந்திய நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்தவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை பின்பற்றாமல், சில சீன நிறுவனங்களால் இந்தப் பயன்பாடுகள் செயல்படுத்தப்படுகின்றன. இது தொடர்பாக, நிதி அமைச்சகம், கார்ப்பரேட் விவகாரங்கள், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் உட்பட சில துறைகள் அனைத்தும் தொடர்ந்து விவாதித்து, இந்த வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்கின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *