• June 15, 2025
செய்திகள்

ஜிப்லி கலையை பயன்படுத்துகிறீர்களா? இணையவழி குற்றப்பிரிவு போலீசாரின் எச்சரிக்கையை படிங்க ….!

சென்னை இணையவழி குற்றப்பிரிவு, தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஜிப்லி கலையைப் பயன்படுத்துவது குறித்த பொது எச்சரிக்கை சமீபத்திய நாட்களில், ஜிப்லி செயற்கை நுண்ணறிவு கலையின் பயன்பாடு பொதுமக்களிளிடையே பெரும் அளவில் அதிகரித்துள்ளது. ஜிப்லி AI பயனர்கள் பதிவேற்றும் செல்பிகள் அல்லது புகைப்படங்களைப் பயன்படுத்தி பயனரை மகிழ்விக்கும் வகையில் அவரது முக அம்சங்களின் அடிப்படையில் அனிம் போன்ற பதிப்புகளை உருவாக்குகிறது. இருப்பினும், ஜிப்லி கலையைச் சுற்றியுள்ள சாத்தியமான ஆபத்துக்களை பயனர்கள் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். […]

தூத்துக்குடி

பங்குனி உத்திரம்: தூத்துக்குடி மாவட்டத்திற்கு 11 ம் தேதி உள்ளூர் விடுமுறை ;

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு  11 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-  “தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாஸ்தா கோவில்களில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரம் திருநாள் அன்று பொதுமக்கள் குல தெய்வ வழிபாடு நடத்துவது வழக்கமாக உள்ளது. நடப்பு ஆண்டு 11.4.2025 அன்று (வெள்ளிக் கிழமை) பங்குனி உத்திர திருநாள் கொண்டாடப்பட உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள […]

செய்திகள்

நீதிமன்ற சமரச நாள்: நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஊர்வலம்

கோவில்பட்டி சார்பு நீதிமன்றம் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி மாரிக்காளை தலைமையில், நீதிமன்ற சமரச நாள் நாள் குறித்த விழிபுணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, விரைவு நீதிபதி பாஸ்கரன், குற்றவியல் நீதிபதிகள் கடற்கரை செல்வம்,பீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சமரசர்களாக பயிற்சி பெற்ற வழக்கறிஞர்கள் சந்திரசேகர், சிவக்குமார், கதிர்வேல்,ரமணன், விஜயகுமார் பழனிச்சாமி,வழக்கறிஞர்கள்,நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சார்பு நீதிமன்றத்தில் இருந்து எட்டயபுரம் ரோடு […]

செய்திகள்

2 ஆண்டாக தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன்

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்று (ஏப்.9) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். ஏப்ரல் 20ம் தேதி ஜா,மீன் உத்தரவாத தொகையாக ரூ.2 லட்சம் செலுத்த அசோக்குமார் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர் விசாரணையில், மோசடி தொகையில், 1.34 கோடி ரூபாய் செந்தில்பாலாஜி வங்கி கணக்கிலும், 29.55 லட்சம் ரூபாய் அவரது மனைவி மேகலாவின் வங்கி கணக்கிலும் செலுத்தப்பட்டுள்ளன. அதேபோல, 25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, செந்தில் பாலாஜி, […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் `சைக்கிள் சவாரி’ ஆசிரியருக்கு பாராட்டு கூட்டம்

உடல் நலம் பெறவும், சுற்றுசூழல் பாதுகாக்க வேண்டி சைக்களில் ஒலிம்பிக் விளையாட்டு வீர்ர்களின் படங்களை வெற்றி கொடியாக வைத்து பவனி வரும் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் வரதராஜனுக்கு கோவில்பட்டி அர்னால்டு ஜிம் வளாகத்தில் நண்பர்கள் குழுவினர்கள் சார்பில் பாராட்டு கூட்டம் நடந்தது. அர்னால்டு ஜிம் நிர்வாகி பென்ட் தலைமை தாங்கி வாழ்த்தினார். பாண்டியன கிராம வங்கி முன்னாள்  ஊழியர் பிரபஞ்ச பாலாஜி தான் எழுதிய கவிதையில் அரசியல்வாதிகள் அரசியல் கட்சி கொடி கட்டி காரில் பறக்கும் […]

செய்திகள்

காதல் விவகாரத்தில் கட்டிட தொழிலாளியை  கொன்று புதைத்தனர்; சிறுவர்கள் உள்பட 4 பேர்

திருநெல்வேலி டவுண் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 20) என்ற கட்டிட தொழிலாளியை காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நெல்லை மாநகர காவல் துணை ஆணையர்கள் கீதா. சாந்தராமன் ஆகியோர் தலைமையில் போலீசார் குருநாதன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசார் சுமார் 3 மணி நேரம் தேடிய நிலையில், எந்த தடயமும் கிடைக்கவில்லை. தொடர்ந்து தகவல் கொடுத்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.                                                                                                                                                                                           அதன் அடிப்படையில் குருநாதன் கோவில் […]

கோவில்பட்டி

கவர்னர் பதவி விலக கோரி கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தியும் வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவிக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பினை கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு வரவேற்று உள்ளது. அதே சமயம் தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது குடியரசுத் தலைவர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி பயணியர் விடுதி அருகில் கவன ஈர்ப்பு […]

செய்திகள்

மருதமலை கோவிலுக்கு நாளை முதல் 14-ந்தேதி வரை 4 சக்கர வாகனங்களில் செல்ல

கோவையை அடுத்த மருதமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. இதையடுத்து மண்டல பூஜை தொடங்கி உள்ளது. தினமும் காலை 11 மணி முதல் 12 மணிக்குள் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு மண்டல பூஜை நடைபெறுகிறது. இதில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அர்ச்சனை, வழிபாடு செய்யப்படுகிறது இந்த பூஜை தொடர்ந்து 48 நாட்கள் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து பங்குனி உத்திரம், தமிழ் புத்தாண்டு என விஷேச நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை […]

செய்திகள்

குமரி அனந்தன் காலமானார்; கவர்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் (வயது 93). இலக்கியவாதியான இவர் வயது மூப்பு காரணமாக குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டாக்டர்கள் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 12.15 […]

கோவில்பட்டி

திருச்சி நூலகத்துக்கு காமராஜர் பெயர்; பாண்டியனார் மக்கள் இயக்க தலைவர் வரவேற்பு

பாண்டியனார் மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் சீனிராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திருச்சியில் ரூ.290 கோடியில் அமைய உள்ள நூலகத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவரான டபுள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டியனாருக்கு தமிழகஅரசு  மணி மண்டபம் மற்றும் அவரது திருஉருவ சிலையும் அமைக்க தமிழ்நாடு முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். இதனை வரவேற்கிறோம். நாடார் சமுதாய  மக்கள் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் […]