ஜிப்லி கலையை பயன்படுத்துகிறீர்களா? இணையவழி குற்றப்பிரிவு போலீசாரின் எச்சரிக்கையை படிங்க ….!
சென்னை இணையவழி குற்றப்பிரிவு, தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஜிப்லி கலையைப் பயன்படுத்துவது குறித்த பொது எச்சரிக்கை சமீபத்திய நாட்களில், ஜிப்லி செயற்கை நுண்ணறிவு கலையின் பயன்பாடு பொதுமக்களிளிடையே பெரும் அளவில் அதிகரித்துள்ளது. ஜிப்லி AI பயனர்கள் பதிவேற்றும் செல்பிகள் அல்லது புகைப்படங்களைப் பயன்படுத்தி பயனரை மகிழ்விக்கும் வகையில் அவரது முக அம்சங்களின் அடிப்படையில் அனிம் போன்ற பதிப்புகளை உருவாக்குகிறது. இருப்பினும், ஜிப்லி கலையைச் சுற்றியுள்ள சாத்தியமான ஆபத்துக்களை பயனர்கள் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். […]