நீதிமன்ற சமரச நாள்: நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஊர்வலம்


கோவில்பட்டி சார்பு நீதிமன்றம் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி மாரிக்காளை தலைமையில், நீதிமன்ற சமரச நாள் நாள் குறித்த விழிபுணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, விரைவு நீதிபதி பாஸ்கரன், குற்றவியல் நீதிபதிகள் கடற்கரை செல்வம்,பீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சமரசர்களாக பயிற்சி பெற்ற வழக்கறிஞர்கள் சந்திரசேகர், சிவக்குமார், கதிர்வேல்,ரமணன், விஜயகுமார் பழனிச்சாமி,வழக்கறிஞர்கள்,நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சார்பு நீதிமன்றத்தில் இருந்து எட்டயபுரம் ரோடு வரை நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் ஊர்வலம் நடைபெற்றது.
தொடர்ந்து கோவில்பட்டி சார்பு நீதிபதி மாரிக்காளை மீடியேஷன் குறித்து தலைமை உரையாற்றினார். மீடியேஷன் சம்பந்தமாக வழக்கறிஞர் சந்திரசேகர் சிறப்புரையாற்றினார்.சமரச மையத்தின் உதவியாளர் நன்றி கூறினார்


