கோவில்பட்டியில் `சைக்கிள் சவாரி’ ஆசிரியருக்கு பாராட்டு கூட்டம்

உடல் நலம் பெறவும், சுற்றுசூழல் பாதுகாக்க வேண்டி சைக்களில் ஒலிம்பிக் விளையாட்டு வீர்ர்களின் படங்களை வெற்றி கொடியாக வைத்து பவனி வரும் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் வரதராஜனுக்கு கோவில்பட்டி அர்னால்டு ஜிம் வளாகத்தில் நண்பர்கள் குழுவினர்கள் சார்பில் பாராட்டு கூட்டம் நடந்தது.
அர்னால்டு ஜிம் நிர்வாகி பென்ட் தலைமை தாங்கி வாழ்த்தினார். பாண்டியன கிராம வங்கி முன்னாள் ஊழியர் பிரபஞ்ச பாலாஜி தான் எழுதிய கவிதையில் அரசியல்வாதிகள் அரசியல் கட்சி கொடி கட்டி
காரில் பறக்கும் கலிகாலத்தில்..ஒலிம்பிக் விளையாட்டுவீரர்கள் படங்களை வெற்றி கொடியாக தன் சைக்கிளில் அமைத்து கோவில்பட்டியை வலம் வரும் வரதராஜன் கோவில்பட்டி இந்து நாடார் மேல் நிலைப்பள்ளியில் பணியாற்றி ஒய்வுபெற்ற..உடற்கல்வி ஆசிரியர்..
இளமைக்காலம் தொட்டு இன்று வரை.. சைக்கிளிலில் தான் பயணிக்கிறார்.செய்கிறார். சுகர், ரத்த அழுத்தம்.ஆஸ்மா, மூட்டுவலி..போன்ற நோய்கள்..இவரைக் கண்டு பயந்து ஓடுகின்றன,
.இப்போதும் உடற்கட்டமைப்பு பயிற்சி செய்கிறார்..இறகு பந்து விளையாடுகிறார்..உடற்பயிற்சி ஆசிரியர் வரதராஜன் சைக்கிள் ஓட்டும் நேயம்..இன்றைய இளைய தலைமுறை..நோயில்லாமல்..செலவில்லாமல்.. நூறாண்டு வாழ.. நிச்சயம் வழிகாட்டும்..என்றும் வாழ்த்தினார்கள்.
எஸ்பிஐ லைப் அட்வைசர் பாலாஜி, வக்கீல் சுரேஷ் குமார், பொறியியல் வல்லுநர் ரஞ்சித் ராஜா, கோவில்பட்டி மைக்ரோகிரின் செயல்பாட்டாளர் சுரேஷ்குமார் உட்பட உடற்கட்டமைப்பு ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


