• June 8, 2025

கவர்னர் பதவி விலக கோரி கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

 கவர்னர் பதவி விலக கோரி கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தியும் வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவிக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பினை கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு வரவேற்று உள்ளது.

அதே சமயம் தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது குடியரசுத் தலைவர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி பயணியர் விடுதி அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகி நல்லையா, மோகன், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் கதிரேசன்,

பாண்டியனார் மக்கள் இயக்க வழக்கறிஞர் சீனிராஜ், ஐ.என். டி. யு. சி. ராஜசேகரன், காங்கிரஸ் கட்சி  துரைராஜ், மனிதநேய மக்கள் கட்சி செண்பக ராஜ், இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் அபிராமி முருகன், பகத்சிங் ரத்ததானக் கழகம் காளிதாஸ், இரட்டைமலை சீனிவாசனார் இயக்க செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *