• June 11, 2025
கோவில்பட்டி

கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

நாட்டின் சகோதரத்துவத்தை சீர்குலைக்கும், சிறுபான்மை இஸ்லாமிய மக்களை துன்புறுத்தும் வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வலியுறுத்தி  கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தர்ணா போராட்டம் பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்தது. ஒன்றிய மார்க்சிஸ்ட் செயலாளர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார்.. மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். எட்டயபுரம் தாலுகா செயலாளர் ஜீவராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ஜோதிபாசு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி,மணி,ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் தினேஷ்குமார்,கோவில்பட்டி ஜமாத் […]

செய்திகள்

கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் பெரிய வியாழன் பாதம் கழுவும் நிகழ்ச்சி

கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு பெரிய வியாழன்,பாதம் கழுவும் நிகழ்வுகள் நடைபெற்றது இயேசு கிறிஸ்து பெரிய வியாழன் அன்று யூதா சால் காட்டிக் கொடுக்கப்பட்டு பெரிய வெள்ளி அன்று சிலுவையில் அறையப்பட்டு மரணத்தை தழுவி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வருவார்  பெரிய வியாழனான இன்று மூன்று முக்கிய நிகழ்வுகளை நிகழ்த்தினார்  1. தன் சீடர்களுடன் அமர்ந்து தான் கடைசி இரவு உணவு உட்கொண்டு அப்பம், ரசம் என நற்கருணையை ஏற்படுத்தினார் . […]

செய்திகள்

கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுர அலங்காரம்: அதிமுக., பாஜக கண்டனம்

தமிழக சட்டசபையில் இன்று இந்து அறநிலைய துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.. இதையொட்டி அமைச்சர் சேகர் பாபு, மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது நினைவிடத்தில் கோவில் கோவில் கோபுரம் போல அலங்கரிக்கப்பட்டு இருந்தது.. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அதிமுகவும், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. “திமுக அரசு, இந்து மத மக்களின் உணர்வுகளை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருவதாகவும், இந்துக்களை கொச்சைப்படுத்துவதில் அப்படி என்ன […]

செய்திகள்

சர்ச்சை பேச்சு: அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தி.மு.க.வில் பொன்முடி வகித்து வந்த தி.மு.க. துணைப்பொதுசெயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும் அவர், தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியில் உள்ளார். அநாகரிகமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. சர்ச்சை பேச்சு […]

கோவில்பட்டி

10 நாட்களில் பவுனுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்த தங்கம்

தங்கம் விலை கடந்த 9-ந் தேதியில் இருந்து ‘கிடுகிடு’வென உயர்ந்து வந்து, கடந்த 12-ந் தேதி ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்து 160-க்கு விற்பனை ஆனது. இது அப்போது இதுவரை இல்லாத உச்சமாக பார்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 14-ந் தேதியில் இருந்து விலை சற்று குறையத் தொடங்கியது.அன்றைய தினம் பவுனுக்கு ரூ.120-ம், அதற்கு மறுநாள் பவுனுக்கு ரூ.280-ம் குறைந்து மீண்டும் ஒரு பவுன் தங்கம் ரூ.70 ஆயிரத்துக்கு கீழ் வந்து ஆறுதலை கொடுத்தது. இந்த நிலையில் நேற்று விலை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு

கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவில் தொழில்நுட்ப கருத்தரங்கு (GEN-E TRIX 2025) நடைபெற்றது, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை சார்பில் நடந்த இந்த கருத்தரங்க நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் ரவீந்திரன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். கருத்தரங்கில் காகித விளக்கக்காட்சி,சட்டத்தை யூகித்தல்,தொழில்நுட்ப வினாடி வினா,தனிநடிப்பு, புதையல் வேட்டை, எலக்ட்ரானிக்ஸ் ஸ்போர்ட்ஸ் போன்ற போட்டிகள் நடை பெற்றது. ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி,சிவகாசி,  ஏ.ஏ.ஏ. பொறியியல் கல்லூரி,விருதுநகர், திருச்சி அண்ணா பல்கலைக் கழகம், உதயா பொறியியல் […]

கோவில்பட்டி

அமலாக்கத்துறையை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோவில்பட்டி ஸ்டேட் பேங்க் முன்பு அமலாக்கதுறையை கண்டித்தும்,மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அருண்பாண்டியன் தலைமையிலும் மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி, மாவட்ட செயலாளர் துரைராஜ்,பொதுக்குழு உறுப்பினர் உமாசங்கர்,ஐஎன்டியூசி ராஜாசேகரன் ஆகியோர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்கள் பிரேம்குமார், காமராஜ்,மாரிமுத்து ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் கார்த்தி காமராஜ், பொது செயலாளர் சண்முகராஜா,சமூக ஊடக பிரிவு […]

கோவில்பட்டி

சுந்தரலிங்க தேவேந்திரனார் 255 வது பிறந்தநாள்; கோவில்பட்டியில் உருவசிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை

சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்க தேவேந்திரனார் 255 வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரில் உள்ள சுந்தரலிங்கனார் திருவுருவச் சிலைக்கு, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக சார்பில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன்,முன்னாள் […]

செய்திகள்

பாஜகவிடம் அதிமுகவை அடமானம் வைத்துவிட்டனர்; கருணாஸ் சொல்கிறார்

சென்னை ஆலந்தூரில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- கடந்த 15 ஆண்டுகளாக பாலியல் சம்பங்கள், வன்முறை சம்பவங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையில் சாதி, மத ரீதியான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு மன ரீதியான ஆலோசனைகள் வழங்கி குற்றங்களை தடுக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி ஒரு சந்தர்ப்பவாதி. பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தபோது அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஆனால் மீண்டும் […]

செய்திகள்

நெல்லை இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்கிறார்கள்; உரிமையாளர் மகள் போலீசில் புகார்

திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோவில் எதிரில் உள்ள இருட்டுக்கடை, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிஜிலி சிங் குடும்பத்தினரால், 1,900ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இக்கடையில் ஒரே ஒரு குண்டு பல்பு மட்டும் எரிவதால் இருட்டுக்கடை என பெயர் வந்தது. இக்கடையை தற்போது மூன்றாவது தலைமுறையாக கவிதா என்பவர் நடத்தி வருகிறார். இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா மகள் கனிஷ்காவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த திருமணம் கோலாகலமாக நடந்த […]