• June 8, 2025

சுந்தரலிங்க தேவேந்திரனார் 255 வது பிறந்தநாள்; கோவில்பட்டியில் உருவசிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

 சுந்தரலிங்க தேவேந்திரனார் 255 வது பிறந்தநாள்; கோவில்பட்டியில் உருவசிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

திமுகவினர் மாலை அணிவிப்பு

சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்க தேவேந்திரனார் 255 வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரில் உள்ள சுந்தரலிங்கனார் திருவுருவச் சிலைக்கு, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக சார்பில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பொன்னுத்துரை,முன்னாள் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் புவனேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதிமுகவினர் மாலை அணிவிப்பு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ் தலைமையில், மாவட்டத் துணைச் செயலாளர் முருகேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி ,அழகர்சாமி, போடுசாமி ,இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாஜகவினர்

பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சரவணகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகரத்தலைவர் காளிதாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மாநில காங்கிரசார் மாலை அணிவிப்பு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்க தேவேந்திரனார் சிலைக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமையில் நகரத் தலைவர் கருப்பசாமி மாலை அணிவித்தார் இளைஞர் அணி தலைவர் எஸ் ஏ கனி முன்னிலை வகித்தார்

மேலும் மாவட்ட பொருளாளர் செல்வராஜ் செயலாளர் திருமுருகன் பொது செயலாளர் அய்யாதுரை செயற்குழு உறுப்பினர் மணிமாறன் செந்தூர்பாண்டியன் கோவில்பட்டி மேற்கு வட்டார தலைவர் கனிராஜ் நகரத் துணைத் தலைவர் ரமேஷ் வட்டார துணைத் தலைவர்கள் தங்கராஜ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முன்னாள் மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையில்,வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின்,நகரச் செயலாளர் கருப்பசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் மாடசாமி,காளிராஜ், கருப்பசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அமமுக கட்சியினர்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் பூலோகப்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மாவட்ட அவைத்தலைவர் அமிர்தராஜ் பாண்டியன்,ஒன்றிய செயலாளர் ஈஸ்வரபாண்டியன்,நகரச் செயலாளர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தினர்

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வடக்கு மாவட்ட நிர்வாகி பாலசுப்பிரமணியம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்து முன்னணி

இந்து முன்னணி சார்பில் மாநிலத் துணைத்தலைவர் ஜெயக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் வெங்கடேஷ், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புதிய தமிழகம் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் நிறுவனத் தலைவர் அன்புராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சந்தனபிரியா பசுபதி பாண்டியன்

கோவில்பட்டி வீரத்தளபதி சுந்தரலிங்க தேவேந்திரனார் வெண்கல சிலை பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பொதுநல அறக்கட்டளை தலைவர்,தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் சந்தனபிரியா பசுபதிபாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக மாலை அணிவித்து -மரியாதை செய்யப்பட்டது.

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லையா, ஞானம், காங்கிரஸ் கட்சி ராஜசேகரன், துரைராஜ், அருள்ராஜ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துக்குமார், ஜெகன், மனித நேய மக்கள் கட்சி செண்பகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

.கோவில்பட்டி சுற்றுவட்டார தேவேந்திரகுல வேளாளர்கள் சார்பில் பெண்கள் பால்குடம் ஊர்வலம் எடுத்து வந்து சுந்தரலிங்கனார் திருவுருவச்சிலைக்கு பால் அபிஷேகம் செய்து,மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *