நெல்லை இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்கிறார்கள்; உரிமையாளர் மகள் போலீசில் புகார்

திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோவில் எதிரில் உள்ள இருட்டுக்கடை, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிஜிலி சிங் குடும்பத்தினரால், 1,900ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது.
இக்கடையில் ஒரே ஒரு குண்டு பல்பு மட்டும் எரிவதால் இருட்டுக்கடை என பெயர் வந்தது. இக்கடையை தற்போது மூன்றாவது தலைமுறையாக கவிதா என்பவர் நடத்தி வருகிறார்.
இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா மகள் கனிஷ்காவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த திருமணம் கோலாகலமாக நடந்த நிலையில், தனக்கு வரதட்சணை கொடுமை நேர்ந்து வருவதாக கனிஷ்கா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
.”கணவர் பல்ராம் சிங் வரதட்சணையாக இருட்டுக்கடை உரிமையை கேட்பதாகவும், இருட்டுக்கடை உரிமையை மாற்றித் தரும்படி கணவர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் புகாரில் கூறி இருக்கிறார்.
மேலும் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், அந்தப் பெண்ணை கோவையில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும், அதன் மூலம் கணவருடன் தினமும் சண்டை ஏற்பட்டதாகவும் கனிஷ்கா தெரிவித்துள்ளார். மேலும், தனது கணவர் பல்ராம் சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்
தனது மகளின் எதிர்காலத்தைக் கருதி இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருந்த கவிதா, பின்னர் பல்ராம் சிங் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பி மிரட்டியதால், போலீசில் புகார் அளித்ததாக கூறினார்.,
இந்த வரதட்சணை புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் கவிதாவின் மகள் கனிஷ்கா, கணவர் பல்ராம் சிங் மீது வரதட்சணை புகார் அளித்துள்ள நிலையில் தற்போது கனிஷ்காவின் கணவரும், மாமனாரும் மறுத்துள்ளனர்,
இருட்டுக்கடையே நாங்கள் வரதட்சனையாக கேட்கவில்லை” என்றும், ஒரு ரூபாய் கூட வரதட்சணையாக வாங்கவில்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.
