கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 23ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டி நேற்று இறுதிக்கட்டத்தை அடைந்தது. இரவு 7 மணிக்கு கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இறுதிப் போட்டியை முன்னாள் இந்திய ஆக்கி வீரரும், அர்ஜுனா விருது பெற்றவருமான என். முகமது ரியாஸ் தொடங்கி வைத்தார் பரபரப்புடன் தொடங்கிய […]
டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது; திமுக பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
மதுரை உத்தங்குடியில் நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது:- தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள். சாதிக்கலவரங்களை தூண்டுவார்கள். மக்களை அனைத்து வகையிலும் பிளவுபடுத்துவார்கள். நம்முடைய பிள்ளைகளை படிக்க விட மாட்டார்கள். பிற்போக்குத்தனங்களில் நம்மை மூழ்கடிப்பார்கள். தொழில் வளர்ச்சி இருக்காது. இந்தி மொழித் திணிப்பு, பண்பாட்டுத் திணிப்பு செய்து, தமிழ்நாட்டின் தனித்துவத்தையே அழித்துவிடுவார்கள். ஜூன் முதல் வாரத்தில் இருந்து, என்னுடைய பணி என்ன என்றால், கழக நிர்வாகிகளை தொகுதி வாரியாக, […]
கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 23ம் தேதி முதல் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடின. எ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாக பிரித்து அணிகள் […]
கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கல்வி வளம் சிறக்கவும், மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், மக்கள் நலமுடன் வளம்பெறவும், தொழில்வளம் சிறக்கவும், கொரானா கொடிய நோய் மீண்டும் பரவாமல் தடுக்கவும் கலச விளக்குவேள்வி பூஜை நடைபெற்றது. ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி. ஆர்.முருகன் வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார்.சக்தி கொடியை மன்ற தலைவர் அப்பாசாமி ஏற்றிவைத்தார். தொடர்ந்து அடிகளார் வளர்க்கும் ஆன்மிகத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ற தலைப்பில் […]
மதுரையை அடுத்த உத்தங்குடியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில், கலைஞர் அறிவாலயம் முகப்பு தோற்றத்துடன் கூடிய பொதுக்குழு கூட்ட திடலின் முன்பாக வைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். பின்னர் சரியாக 10 மணிக்கு பொதுக்குழு கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. முன்னதாக கூட்டத்தில் 3 ஆயிரத்து 400 பொதுக்குழு உறுப்பினர்கள், தி.மு.க.வின் அமைப்பு ரீதியிலான 23 அணிகளின் நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க.வின் நிர்வாக […]
அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பற்றி தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா விமர்ச்சித்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது […]
`வஞ்சக பா.ஜ.க.வையும் துரோக அ.தி.மு.க.வையும் விரட்டியடிபோம்’; திமுக பொதுக்குழு தீர்மானங்கள் விவரம்
திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எவை? – முழு விவரம் மதுரை மாவட்டம் உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தீர்மானங்கள் விவரம்: வருமாறு:-*கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம். *மக்களின் பேராதரவுடன் தொடர் வெற்றி நாயகராகத் திகழும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு பாராட்டுகள். *இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை […]
ராஜ்யசபா தேர்தலில் அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்றும், கூட்டணியில் தொடரும் தேமுதிகவுக்கு 2026-ல் ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்றும் அதிமுக அறிவித்துள்ளது. தேமுதிகவிற்கு சீட் வழங்கப்படாதது அக்கட்சியினருக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா கூறியதாவது: 5 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை சீட் தருகிறோம் என அதிமுக உறுதியளித்து இருந்தது. தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் தருகிறோம் என்று எழுதி கொடுத்தது […]
சமூக வலைத்தளத்தில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தும் புல்வெளியில் பேசியபடியே நடந்து செல்லும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த புல்வெளியில் நடந்தபடியே வரும் ஆதவ் அர்ஜூனா தமிழக அரசியல் கூட்டணி தொடர்பாக பேசுகிறார். அவருடன் வரும் புஸ்சி ஆனந்த் அதற்கு பதில் எதுவும் தெரிவிக்காமல், ‘ம்.., ம்…’ என்றபடி வருகிறார். இந்த வீடியோவில் ஆதவ் அர்ஜூனா, ‘அண்ணாமலையாச்சும் 10 பேரை வச்சிக்கிட்டு, தேர்தலில் நின்னு 18, […]
விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- நடப்பாண்டில் ஆகஸ்ட் 10ம் தேதி பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு நடத்தப்படும். பாமகவின் மகளிர் மாநாட்டில் பங்கேற்க அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்படும். 46 வருடங்களாக பாமகவை நான் தான் இயக்கி வருகிறேன். என் பின்புலத்தில் இருந்து யாரும் இயக்கவில்லை. என்னை யாரும் இயக்க முடியாது. என் பொதுவாழ்வு மிக நீண்ட பயணம் கொண்டது. கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை 46 ஆண்டுகளாக பயணித்துள்ளேன். […]