தூத்துக்குடி தேவர் காலனியைச் சேர்ந்த சங்கரி என்பவர் தனது இரண்டு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறி இருந்ததாவது:- எனது கணவர் அந்தோணி (34) சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள பாரத் பெட்ரோலியம் எரிவாயு நிரப்பும் ஆலையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். எங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. கடந்த 15ம் தேதி இரவு வேலை முடிந்து எனது கணவரும் , அவருடன் பணிபுரியும் பிரபு என்பவரும் இரு சக்கர வாகனத்தில் 3 […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் 69-வது படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்திற்கு ‘ஜன நாயகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர். கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகின. ஏற்கனவே இந்த படமானது வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் […]
கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி 1974-1977 -ம்ஆண்டு பழைய மாணவர் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகத்தினர் இணைந்து மாதம் தோறும் நான்காவது ஞாயிற்றுக்கிழமை அன்று இலவ ச கண்சிகிச்சை முகாம் நடத்தி வருகிறார்கள். மார்ச் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் உயர்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மாணவர் சங்க தலைவர் ஜி.,ஜெயராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் என்..ராஜவேல் மற்றும் சங்க நிர்வாகிகள் முத்து […]
கோவில்பட்டியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நகர, தாலுகா குழு சார்பில் மாவீரன் பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டு அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. ரத்ததான முகாமிற்கு இளைஞர் பெருமன்றம் நகரச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.முகாமை கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன்,தாலுகா துணைச் செயலாளர் பாபு,இளைஞர் பெருமன்றம் மாநிலத் துணைத் தலைவர் ரஞ்சனி கண்ணம்மா,மாவட்டச் செயலாளர் சுரேஷ்குமார்,சிபிஐ நகர உதவிச்செயலாளர் அலாவுதீன்,ஒன்றியக்குழு […]
கோவில்பட்டியில் மாவீரன் பகத்சிங் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு பகத்சிங் உருவப்படத்திற்கு கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகி நல்லையா, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், மாவீரன் பகத்சிங் ரத்ததானக் கழக நிர்வாகிகள் காளிதாஸ், லட்சுமணன், சண்முகராஜ்,காங்கிரஸ் கட்சி துரைராஜ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துகுமார்,திருவள்ளுவர் மன்ற தலைவர் கருத்தப் […]
கடந்த 2022-ம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்த படம் ‘லவ் டுடே’. இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றநிலையில், ‘லவ்யப்பா’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அத்வைத் சந்தன் இயக்கத்தில் நடிகர் அமீர்கானின் மகன் ஜுனைத் கானும் ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூரும் இப்படத்தில் நடித்திருந்தனர். கடந்த பிப்ரவரி 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்தது. சமீபத்திய பேட்டியில், லவ்யப்பாவின் பாக்ஸ் ஆபிஸ் தோல்வி குறித்து அமீர்கான் பேசினார். […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் கடந்த 2021-ம் ஆண்டு பிரபல பாட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் தெலுங்கு சினிமாவில் ஒரு படத்தில் அதுவும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார். அந்த ஒரு படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. இந்நிலையில், அதற்கு காரணம் என்ன என்பதை ஜுவாலா கட்டா பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:- ‘நடிகர் நிதின் என் நண்பர். ஒருநாள் அவர் என்னிடம் […]
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் நேற்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன்படி கோவை, நெல்லை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. கோவில்பட்டியில் நேற்று காலை, மதியம் என கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.மழை நின்று சில நிமிடங்களில் தண்ணீர் வடிந்து விட்டது. இளையரசநேந்தல் சாலையில் சுரங்க பாலத்தில் மட்டும் சிறிதளவு தண்ணீர் […]