2004-ம் ஆண்டு தனது 5 வயதில் இந்தியில் வெளியான ‘வாஸ்து சாஸ்த்ரா’ படத்தில் சுஷ்மிதா சென்னின் ‘மகனாக’ நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஹ்சாஸ் சன்னா. அதன்பின்னர் 2006-ம் ஆண்டு வெளியான கபி அல்விதா நா கெஹ்னாவில் ஷாருக்கானின் ‘மகனாக’ நடித்திருந்தார். இவர் பெண்ணாக இருந்தாலும் சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில் ஆண் கதாபாத்திரத்தில் திரையில் தோன்றி பிரபலமாகி இருக்கிறார். அதன்பின்னர், வெப் தொடர்கள் மற்றும் குறும்படங்களில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் இதயங்களைக் கவர்ந்த அஹ்சாஸ் சன்னா, […]
பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு. இவருக்கு விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு என்கிற இரண்டு மகன்களும், லட்சுமி மஞ்சு என்ற மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக நடிகர் மோகன்பாபுவுக்கும் மகன் மனோஜ் மஞ்ஜுவுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இருவரும் மாறி மாறி தொடர்ந்து போலீசில் புகார் அளித்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த புதன் கிழமையன்று(11.12.2024) மனோஜ் மஞ்சு, மோகன் பாபு வீட்டிற்குள் சில ஆட்களுடன் நுழைய முயன்றிருக்கிறார். […]
சீனிக்கிழங்கு அல்லது சர்க்கரைவள்ளிக்கிழங்கின் மேல் தோலிலிருந்து தயாரிக்கப்படும் கசாயம் சில ஆரோக்கிய நன்மைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனுடைய நன்மைகள் பாரம்பரிய மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன: *தோலில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சினைகளுக்கு உதவுகிறது மற்றும் குடல்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. •சர்க்கரைவள்ளிக்கிழங்கின் தோலில் உள்ள சில கூட்டுபொருட்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவக்கூடும். *தோல் கசாயத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலிலுள்ள நச்சுக்களை நீக்குவதில் உதவுகிறது. *இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல். இதில் உள்ள பொட்டாசியம் போன்ற கனிமங்கள் ரத்த அழுத்தத்தை […]
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் சிற்பி அம்பேத்கரை இழிவு படுத்தும் விதமாக பேசிய மத்திய உள்துறை மந்திர அமித்ஷா வை பதவி விலக வலியுறுத்தி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோவில்பட்டியில் கண்டன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்பேத்கர் சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் மாடசாமி தலைமை தாங்கினார். இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் பா.பிரபாவளவன், முற்போக்கு மாணவர் கழகம் மாவட்ட அமைப்பாளர் சு.ஸ்ரீதர் என்ற கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். […]
கோவில்பட்டியில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா கொண்டாட்டப்பட்டது, வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு சங்கத் தலைவர் சங்கர்கணேஷ் தலைமை தாங்கினார்.. செயலாளர் ஜெயசீலன், துணைத் தலைவர் சிவனுபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர.சிறப்பு விருந்தினர்களாக சார்பு நீதிபதி மாரிக்காளை, மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி விரைவு நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் குற்றவியல் நீதிமன்ற நடுவர்கள் கடற்கரை செல்வம் பீட்டர்,விளாத்திகுளம் நீதிபதி ஞான செரித்தா பிளவர் மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் […]
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு இந்திரா காலனி பகுதியில் குடியிருந்து வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கி 20 ஆண்டுகள் ஆகிறது. இந்தப் பட்டாக்கள் கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மனுக்கள் அளித்தும், போராட்டம் நடத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து நேற்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் மந்தித்தோப்பு இந்திரா காலனி பகுதி மக்கள் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். […]
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு தினமும் ஏராளமானோர் வழக்கு விசாரணைக்காக வந்து செல்கின்றனர். இன்று காலை கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் ஒரு வழக்கு விசாரணையில் ஆஜராக வந்தார்.. நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி வருகைக்காக காத்திருந்தபோது திடீரென 4 பேர் மாயாண்டியை சுற்றி வளைத்தனர்,. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அவர்களிடம் இருந்து தப்பித்து நீதிமன்ற வளாகத்தில் ஓடினார். இருப்பினும் அவர்கள் மாயாண்டியை துரத்தி சென்றனர்.. […]
கோவில்பட்டியில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்; தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ சென்னையில் வைத்து தென்னக ரெயில்வே பொதுமேலாளரை சந்தித்தார். கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நிற்காத ரெயில்கள் அனைத்தும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். கடம்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதியை மேம்படுத்தி தரவேண்டும்., கோவில்பட்டியில் சுரங்க பாதை அமைத்து தர வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடம்பூர் ராஜு .கோரிக்கை மனு அளித்தார் இந்த சந்திப்பின்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.சின்னப்பன் பி.மோகன் அகியோர் உடன் […]
கோவில்பட்டி ஓய்எம்சிஏ இயக்கத்தின் சார்பில் பெத்தேல் மகளிர் விடுதியில் கிறிஸ்துமஸ் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது . ஓய்எம்சிஏ நெல்லை தூத்துக்குடி துணை மண்டல செயலர் பொன்ராஜ் தலைமை தாங்கினார்,. மண்டல துணைத்தலைவர் ரோஜர் அப்ரின் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி ஓய்எம்சிஏ தலைவர் ஆர்ம்ஸ்டிராங் வரவேற்றார். ரேக்லன்ட் சபை மன்றத்தலைவர் அருட்திரு சாமுவேல் தாமஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார். விடுதலையின் ஸ்தலம் சபை தலைமைப் போதகர் நவராஜ் எலியேசர் […]