கோவில்பட்டி ஓய்எம்சிஏ சார்பில் கிறிஸ்துமஸ் விழா

கோவில்பட்டி ஓய்எம்சிஏ இயக்கத்தின் சார்பில் பெத்தேல் மகளிர் விடுதியில் கிறிஸ்துமஸ் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது .
ஓய்எம்சிஏ நெல்லை தூத்துக்குடி துணை மண்டல செயலர் பொன்ராஜ் தலைமை தாங்கினார்,. மண்டல துணைத்தலைவர் ரோஜர் அப்ரின் முன்னிலை வகித்தார்.
கோவில்பட்டி ஓய்எம்சிஏ தலைவர் ஆர்ம்ஸ்டிராங் வரவேற்றார். ரேக்லன்ட் சபை மன்றத்தலைவர் அருட்திரு சாமுவேல் தாமஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார்.
விடுதலையின் ஸ்தலம் சபை தலைமைப் போதகர் நவராஜ் எலியேசர் மற்றும் இளையரசனேந்தல் சபை போதகர் அய்யாதுரை ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பெத்தேல் மகளிர் விடுதி சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் இடங்களுக்கு நேரடியாக சென்று கிறிஸ்துமஸ் பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பெத்தேல் மகளிர் விடுதி மேலாளர் ஷைலா மேத்யூ நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஓய்எம்சிஏ செயலாளர் மேத்யூ , விடிவெள்ளி அறக்கட்டளை இயக்குனர் ஷீலா ஆர்ம்ஸ்டிராங், பள்ளி முதல்வர் அருண்குமார், வங்கி ஊழியர் சாம் ஜான்சன் , ஞானக்கண் செல்லையா, ஆசிரியர்கள் பிரின்ஸ் செல்வம், ஐசக் மணி, ராணி லெஸ்லி, பமிலா செல்வம், ஹேனா சாமுவேல் ஆகியோர் செய்திருந்தார்கள்.
