• June 8, 2025

கோவில்பட்டியில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்; தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் கடம்பூர் ராஜு மனு

 கோவில்பட்டியில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்; தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் கடம்பூர் ராஜு மனு

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான  கடம்பூர் செ.ராஜூ சென்னையில் வைத்து தென்னக ரெயில்வே பொதுமேலாளரை சந்தித்தார்.

கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நிற்காத ரெயில்கள் அனைத்தும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்.  கடம்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதியை மேம்படுத்தி தரவேண்டும்., கோவில்பட்டியில் சுரங்க பாதை அமைத்து தர வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடம்பூர் ராஜு .கோரிக்கை மனு அளித்தார்

இந்த சந்திப்பின்போது  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.சின்னப்பன் பி.மோகன் அகியோர் உடன் இருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *