• June 8, 2025

திருநெல்வேலியில் பழிக்குப்பழி சம்பவம்:கோர்ட்டு வாசலில் வாலிபர் வெட்டிக்கொலை

 திருநெல்வேலியில் பழிக்குப்பழி சம்பவம்:கோர்ட்டு வாசலில் வாலிபர் வெட்டிக்கொலை


நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு தினமும் ஏராளமானோர் வழக்கு விசாரணைக்காக வந்து செல்கின்றனர். இன்று காலை கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் ஒரு வழக்கு விசாரணையில் ஆஜராக வந்தார்..

நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி வருகைக்காக காத்திருந்தபோது திடீரென 4 பேர் மாயாண்டியை சுற்றி வளைத்தனர்,. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அவர்களிடம்  இருந்து தப்பித்து நீதிமன்ற வளாகத்தில் ஓடினார். இருப்பினும் அவர்கள்  மாயாண்டியை துரத்தி சென்றனர்..

நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வாசலுக்கு வந்தபோது மாயாண்டியை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் முகம், கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மாயாண்டி சரிந்து விழுந்து உயிரிழந்தார்.  மாயாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இதற்கிடையே  அந்த கும்பல் காரில் ஏறி தப்பிச் சென்றது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சிலர் மற்றும் ஒரு வக்கீல் ஆகியோர் சேர்ந்து ஒருவரை மடக்கி பிடித்தனர்,

பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வாலிபர் ஒருவரை 4 பேர் சேர்ந்து வெட்டிக்கொலை செய்த பயங்கர சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டியை வெட்டிக் கொலை செய்து ஒரு கும்பல் காரில் தப்பிச் சென்ற நிலையில், உடனடி விசாரணை நடத்தி ராமகிருஷ்ணன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலைக்கு பயன்படுத்திய கேரளா பதிவு எண் கொண்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது

கடந்த ஆண்டு கீழநத்தம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக இருந்த ராஜாமணி என்பவர் கொலையில் மாயாண்டிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது., இதற்கு  பழிக்குப்பழியாக மாயாண்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.,

மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா, கிழக்கு மண்டல துணை கமிஷனர் விஜயகுமார், பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்கள்.

தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த கொலையின் பின்னணியில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள். என்பது பற்றி  2 தனிப்படைகள் அமைத்து  தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *