• June 8, 2025

கோவில்பட்டியில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

 கோவில்பட்டியில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கோவில்பட்டியில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா கொண்டாட்டப்பட்டது,

வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தில்  நடந்த விழாவுக்கு சங்கத் தலைவர்  சங்கர்கணேஷ் தலைமை தாங்கினார்.. செயலாளர் ஜெயசீலன், துணைத் தலைவர் சிவனுபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர.சிறப்பு விருந்தினர்களாக சார்பு நீதிபதி மாரிக்காளை, மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி விரைவு நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் குற்றவியல் நீதிமன்ற நடுவர்கள் கடற்கரை செல்வம் பீட்டர்,விளாத்திகுளம் நீதிபதி ஞான செரித்தா பிளவர்  மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் ஸ்டாலின், டிஎஸ்பி ஜெகநாதன்,கோவில்பட்டி தூய பவுலின் ஆலயம் அருட்தந்தை சாமுவேல் தாமஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

விழாவில் வழக்கறிஞர்கள் சங்க துணை செயலாளர் முனீஸ்வரி,மூத்த வழக்கறிஞர்கள் ஆண்ட்ரூஸ் சாம்ராஜ், சந்தானம், ஆழ்வார்சாமி சிவக்குமார், சந்திரசேகர், மோகன்தாஸ் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *